சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் அடுத்த ராஜீவ்நகர் சிக்னல் அருகே மர்ம பெட்டி ஒன்று கிடந்துள்ளது.  இதை கண்ட கண்ணகிநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ்(30) என்பவர் அருகில் உள்ள கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த காவல் துறையினர் நேரில் சென்று பார்த்தபோது கனமாக பெட்டி இருந்ததால் அவர்களும் பதட்டமடைந்த நிலையில் வெடிபொருள் எதேனும் இருக்குமோ என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு  வர வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தமிழக ஆளுநர் முதல்வர் சந்திப்பு : காரணம் என்ன?


மேலும் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியலஷ்மி முன்பாக பெட்டியை திறந்து பார்த்தபோது அதனுள் இரும்பு லாக்கர் பெட்டி இருந்தது அதனை உடைத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 35 கட்டு வெள்ளை தாள்களும், 3 இங்க் பாட்டில்களும் இருந்துள்ளது தெரியவந்தது. 



இந்த மர்ம பெட்டியில் இருந்த வெள்ளை காகிதங்களும், இங்க் பாட்டில்களும் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்த பயன்படும் உபகரணங்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்த பெட்டியை வீசி சென்ற நபர் யார்? கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலா, சென்னையில் கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்படுகிறது என்று பலேவேறு கோணங்களில் கண்ணகி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.



மேலும் படிக்க | தமிழகத்தில் பட்டப்பகலில் மளிகை கடை உரிமையாளரை கடத்தி வட நாட்டவர் அட்டகாசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR