கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 6  மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமாகியுள்ளார். இவரை அவரது உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் அவரின் சகோதரரான குமார் என்பவர், திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டியனின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, பாண்டியனுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்த வேல்முருகன் என்பவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீஸாரிடம் அவர் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார்.


இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், வேல்முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் திடிக்கிடும் தகவலொன்று போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதாவது, பாண்டியனும், வேல்முருகனும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பாண்டியன் வேல்முருகனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.


மேலும் படிக்க | மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு


அப்போது பாண்டியனுக்கும் வேல்முருகனின் மனைவிக்கும் இடையே தகாத பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த வேல்முருகன், பாண்டியனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் பாண்டியன் மீண்டும் வேல்முருகனின் மனைவியிடம் மறைமுகமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், பாண்டியனை அவரது தோட்டத்திற்கு அழைத்து சென்று போதை தலைக்கேறும் அளவிற்கு மதுவை குடிக்க கொடுத்துள்ளார்.


அதன் பிறகு இரும்பு கம்பியால் பாண்டியனின் தலையைில் அடித்து கொலை செய்துள்ளார். அதனை தொடர்ந்து பாண்டியனின் உடலை வேல்முருகன் அவரது தோட்டத்திலேயே குழி தோண்டி புதைக்கவும் செய்துள்ளார்.


கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது போலீஸாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வேல்முருகன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.திரைப்பட பாணியில் நண்பனை நண்பனே கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | தோட்ட காவலாளி வெட்டிக் கொலை - சக ஊழியரின் வெறிச்செயல்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR