வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என்று அழுகையோடு பேசும் இந்த இளைஞர் தற்போது உயிரோடு இல்லை. பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 21 வயதே ஆன இளம் பருவத்தில் இவரை தற்கொலை செய்யும் அளவுக்கு கொண்டு நிறுத்தியது, கந்து வட்டி கொடுமை. கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்த இந்த இளைஞரின் பெயர் தினேஷ் குமார். தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர் பணிபுரிந்து வந்தார். அவசர தேவைக்காக தனக்கு தெரிந்த நபரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


வாங்கி பணத்திற்கு வட்டியுடன் அசலையும் சேர்ந்து கட்டிய தினேஷ், மொத்தமாக கடனை அடைத்து முடித்திருக்கிறார். ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பணத்தாசைக்கு எல்லையில்லாமல் போனது. மேற்கொண்டு பணத்தை கேட்டு தினேஷ் குமாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ,கடும் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ், அவசர முடிவெடுத்து தன் உயிரை மாய்த்திருக்கிறார்.


 



மேலும் படிக்க | மறுமணத்திற்கு பெண் தேடும் ஆண்கள் - 'அம்பு விட்டு வம்பு செய்யும் ஆந்திர பெண்'


யாரிடம்  ? எவ்வளவு ? கடன் வாங்கினார், என்பது குறித்து தற்போது போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்கூட்டியே போலீசில் புகாரளித்திருந்தால் தற்கொலை முடிவை எடுத்திருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது என்று ஊர்க்காரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | கலெக்டர் போல மேசேஜ் அனுப்பி அவரின் உதவியாளரிடமே 'பணம் பறிப்பு' - கைவரிசை காட்டிய 'வடமாநில கும்பல்' !!


உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR