Latest News Kallakurichi Death Toll Increases : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பலர் பலியாகியிருக்கும் விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் சாராயத்தை குடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் நேற்று வரை 39 பேருக்கும் மேல் உயிரிழந்திருந்தனர். தற்போது அந்த உயிரிழப்பு, 50ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இரவு மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கள்ளக்குறிச்சியில் அவலம்:


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த உயிரிழப்பின் எண்ணிக்கைகள் நேற்று தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒரே இரவில் (நேற்று) 8 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என பல இடங்களுகளில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.


துக்க வீட்டில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள்..


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட சுரேஷ், பிரவின் ஆகிய நபர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால்தான் உயிரிழந்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வு, நடைப்பெற்றது.  அதில் கலந்து கொள்ள வந்தவர்கள் அங்கு விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்திருக்கின்றனர். 


மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம்:


இறந்தவர்கள் குடித்திருந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இது விஷமாக மாறியதால்தான் இத்தனை பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல கடந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் பலர் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 


எங்கு திரும்பினாலும் மரண ஓலம்..


கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராய விற்பனை 20 வருடங்களுக்கும் மேலாக நடைப்பெற்று வருவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, விஷச்சாராய விவகாரம் பலர் உயிரிழப்பிற்கு பின் தலைத்தூக்கியிருக்கிறது. கடந்த 2 தினங்களாக கள்ளக்குறிச்சியில் எங்கு திரும்பினாலும் மரண ஓலம் கேட்பதாகவும், விஷச்சாராயத்தால் வீதிக்கு ஒரு மரணம் நிகழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது ஏன்? வரலாறும் பின்னணியும்


பெற்றோர் உயிரிழப்பு..அனாதையான குழந்தைகள்:


கள்ளச்சாராயம் குடித்த கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். ஒரு கையை இழந்து பெயிண்டிங் வேலை செய்து வந்த சுரேஷ் என்பவர், கள்ளச்சாரயத்தை டம்ளரில் ஊற்றி குடித்து விட்டு மிச்சத்தை வைத்து விட்டு சென்றிருக்கிறார். இவரது மனைவி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், சுரேஷ் எடுத்து வைத்திருந்த டம்ளரில் இருப்பது ஓம் வாட்டர் என்று நினைத்து குடித்திருக்கிறார். இருவருக்கும் கள்ளச்சாராயத்தால் உடலில் பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இவர்களுக்கு பள்ளிக்கு செல்லும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். தாய்-தந்தை இருவருமே உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த குழந்தைகள் தற்போது நிற்கதியாக நிற்கின்றனர். இது குறித்து ஊடகத்தாருக்கு பேட்டியளித்த அக்குழந்தைகள், தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.


முக்கிய குற்றவாளிகள் கைது:


கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்து விற்பனை செய்த மூன்று குற்றவாளிகளை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை இன்று பிடிப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடலூரில் பதுங்கி இருந்த இவர், இன்று காலை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ