Omicron Subvariant In China: கோவிட்  நோயை ஏற்படுத்தும் கொரோனாவின் 2 புதிய வகைகள் சீனாவில் அழிவை ஏற்படுத்தி வருகின்றன, இதனால் உலகம் முழுவதுமே கொரோனா பரவும் அச்சம் அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் வைரஸின் துணை வகைகளான BA.5.2 மற்றும் BF.7 ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த இரண்டு வகைகளும் மக்களை விரைவில் தொற்றுவதால் கவலைகள் அதிகரித்துள்ளது. 
 
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது, ஆனால் இது சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் சிறையில் அடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 70 சதவீத மக்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வேகமாகப் பாதிக்கப்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Corona 4th Wave: குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை


கொரோனாவின் இந்த 2 வகைகளும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன


சீனாவில் கொரோனா வைரஸின் அதிகரிப்புக்குப் பின்னால் கோவிட் -19 இன் ஓமிக்ரானின் 2 துணை வகைகள் இருப்பதாக சீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். ஓமிக்ரானின் துணை வகைகளான BA.5.2 மற்றும் BF.7 ஆகியவை சீனாவின் பல நகரங்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த இரண்டு வகைகளும் மக்களை வேகமாகப் பிடிக்கின்றன.


BF.7 மாறுபாடு பெய்ஜிங்கில் அழிவை ஏற்படுத்துகிறது


ஓமிக்ரானின் துணை மாறுபாடு BF.7 சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பேரழிவை ஏற்படுத்துகிறது. வேகமாக மக்களை தொற்றிவரும் வைரஸின் பரவலால், பெய்ஜிங்கில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு வெளியே மக்கள் வரிசைக் கட்டி நிற்கத் தொடங்கியுள்ளனர்.


இந்த 3 அறிகுறிகளை கண்டவுடன் கவனமாக இருங்கள்


Omicron இன் துணை வகைகளான BA.5.2 மற்றும் BF.7 ஆகியவை வேகமாக பரவி வருகின்றன, ஆனால் அவை மிகவும் ஆபத்தானவை அல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய மாறுபாட்டிலிருந்து மக்கள் விரைவாக மீண்டு வருகிறார்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கையும் மிகக் குறைவு.


மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த வகைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கடுமையான தொண்டை வலி, உடல் வலி, லேசான அல்லது அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.


மேலும் படிக்க | Weight Loss: என்ன பண்ணாலும் எடை குறையலயா? இது காரணமாக இருக்கலாம்


இன்னும் 3 மாதங்களில் சீனாவில் 3வது அலை வரலாம்


அடுத்த மூன்று மாதங்களில் கோவிட்-19 இன் மூன்றாம் அலை ஏற்படலாம் என சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யாவோ  முன்னறிவித்துள்ளார். சீனா தற்போது உருவாகியுள்ள வைரஸ் பரவல், ஜனவரி 15 ஆம் தேதிவாக்கில் உச்சநிலை எட்டும் என்றும் அவர் கணிக்கிறார்.


சீனாவின் சந்திர புத்தாண்டும் ஜனவரி 21 முதல் தொடங்குகிறது, இதனால் அதிக மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால், மற்றொரு அலை வரலாம் என்று அஞ்சப்படுகிறது.


மேலும் படிக்க | குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரால் வருமா? அறிகுறிகள் இதோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ