SBI Employees Good News: இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஊழியர்கள் மிக விரைவில் ஒரு நல்ல செய்தியை பெற உள்ளனர். இது குறித்து சுமார் ஒரு வாரம் முன்னர் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. SBI வங்கி ஊழியர்கள் விரைவில் அதிகரித்த ஊதியத்தை பெறுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

State Bank Of India-வின் சுமார் 2.5 லட்சம் ஊழியர்களுக்கு இந்த நன்மைகள் கிடைக்கக்கூடும். SBI தனது ஊழியர்களுக்கு (SBI Employees) 15 நாட்களுக்கான செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை (Performance-linked Incentive) அதாவது போனஸை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயின் போது நல்ல முறையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


15 நாட்களுக்கான போனஸ் கிடைக்கக்கூடும் 


கடந்த நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 2021 காலாண்டு), SBI நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. வங்கிக்கு நிகர லாபமாக ரூ .6,450.7 கோடி கிடைத்துள்ளது. 2020 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, ​​வருவாயில் 80 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. SBI தனது ஊழியர்களுக்கு வருவாய் அதிகரிப்பின் பலனையும் கொடுக்கக்கூடும். இந்த தகவல்கள் ஊடக அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன.


ஊக்கத்தொகை விதி உள்ளது


நவம்பர் 2020 இல், இந்திய வங்கிகள் சங்கம் (Indian Banks Association) ஒரு ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அரசு வங்கிகளின் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டது. வங்கிக்கு வருடாந்திர வளர்ச்சி, இயக்க லாபம் மற்றும் நேர்மறை நிகர லாபம் ஆகியவற்றில் லாபம் கிடைக்கும்போது, வங்கி ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க ஒரு விதி உள்ளது. அதன்படி, SBI-க்கு கிடைத்துள்ள பம்பர் லாபத்தின் பலனை SBI ஊழியர்களும் பெறுவார்கள்.


ALSO READ: SBI Alert: எஸ்பிஐ வங்கியின் பயனுள்ள அறிவிப்பு; வங்கி பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்


ஊழியர்களின் ஊக்கத்தொகை இவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது


ஊதிய ஒப்பந்தத்தின் கீழ், ஒரு வங்கியின் லாபம் 5 முதல் 10 சதவீதம் வரை இருந்தால், ஊழியர்களுக்கு 5 நாட்களுக்கான ஊதியம் ஊக்கத்தொகையாக கிடைக்கும். 10 முதல் 15 சதவீதம் லாபத்தில் ஊழியர்களுக்கு 10 நாள் சம்பளம் ஊக்கத்தொகையாகக் கிடைக்கும். 15 சதவீத்துக்கு மேலாக வங்கிக்கு லாபம் இடைத்தால், ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான ஊதியம் ஊக்கத்தொகையாக கிடைக்கும். இந்த வசதி அனைத்து பதவிகள் மற்றும் ரேங்கில் இருக்கும் ஊழியர்களுக்கும் கிடைக்கிறது.


இந்த வங்கிகள் போனஸ் கொடுத்துள்ளன


எஸ்பிஐ (State Bank of India) தனது ஊழியர்களுக்கு சில நாட்களில் போனஸை அறிவிக்கக்கூடும். ஆனால் அரசுக்கு சொந்தமான பிற வங்கிகளான கனரா வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கி இலாபம் ஈட்டிய பின்னர் தங்கள் ஊழியர்களுக்கு செயல்திறன் இணைக்கப்பட்ட சலுகைகளை வழங்கியுள்ளன. கனரா வங்கி ஊழியர்களுக்கு 15 நாள் சம்பளத்தையும், மகாராஷ்டிரா வங்கி தனது ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கான போனஸையும் வழங்கியுள்ளன. கனரா வங்கி கடந்த நிதியாண்டில் ரூ .1,010.87 கோடிக்கான நன்மையை அடைந்தது. அதே சமயம் 2020-21 ஆம் ஆண்டில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா 165 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.


ALSO READ:SBI: பான் மற்றும் ஆதார் அட்டை இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR