செய்யும் வேலைக்கு சன்மானம் கிடைத்தால் தான் அதில் ஈடுபாடு இருக்கும். அதிலும் பணிபுரிபவர்கள், தாங்கள் செய்யும் வேலைக்கான ஊதியத்தின் அடிப்படையில் தான் வாழ்க்கைச் செலவுகளை திட்டமிட வேண்டியிருக்கிறது. பொதுவாக வேலை பார்க்கும் அனைவருக்கும் சம்பள தேதி என்பது முக்கியமான நாளாக இருக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் சம்பளம் வர தாமதமானால் ஊழியருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பம் உட்பட பலரின் வாழ்க்கையில் பிரச்சனையாகிவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பளம் சரியாக வந்து கொண்டிருந்தாலும், அது மாதம் முடிவதற்குள் தீர்ந்து போய், பணத் தட்டுபாடு இருந்தாலும், திடீர் செலவு ஏதேனும் ஏற்பட்டாலோ திண்டாட்டம் தான். அதுமட்டுமல்லாமல், மாத சம்பளம் போதுமானதாக இல்லாத பல்வேறு சூழ்நிலைகள் உள்ளன.


இதுபோன்ற நேரங்களில், ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திலிருந்தோ அல்லது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) என கடன் வாங்கி நிலைமையை சமாளிக்க வேண்டியிருக்கிறது. சம்பளத்தை நம்பி வெளியில் வாங்குவது என்பது பொதுவாக இயல்பான விஷயம் தான்.


தற்போது, உங்களுடைய அடுத்த சம்பளம் வரும் வரை முன்கூட்டியே சம்பளக் கடனை ஆன்லைனில் எளிதாகப் பெறலாம் என்ற வசதிகள் வந்துவிட்டன. வீட்டு வாடகை, குழந்தைகளின் பள்ளி கட்டணம், பழுதுபார்க்கும் செலவும், பில் செலுத்த வேண்டியது என பல செலவுகளை சம்பள முன்பணக் கடன் மூலம் ஈடுகட்டலாம். சம்பளக் கடன் என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு வாங்கப்படுவது என்பதால், இதற்காக நீங்கள் செய்யும் செலவும் குறைவு தான். அதோடு திருப்பிச் செலுத்த எளிதானது. 


கடன் வாங்கும்போது ஏற்படும் மன அழுத்தம், முன்கூட்டியே வாங்கும் சம்பளக் கடன் வாங்கும்போது ஏற்படுவதில்லை. அதேபோல் இந்தக் கடன், உடனடி தனிநபர் கடன் ஒப்புதல் மூலம் தடையின்றி துரிதமாக கிடைக்கிறது. அவசரச் செலவுகளுக்கு யாரிடமும் கையேந்தாமல் உடனடியாக பெறக்கூடிய கடன் இது. 


தனிநபர் கடனும் உடனடியாக கிடைத்துவிடுமே, அப்படியென்றால், முன்கூட்டிய சம்பளக் கடனுக்கான தேவை என்ன என்ற கேள்வி எழும். இந்த இருவித கடன்களுக்கான வித்தியாசத்தைத் தெரிந்துக் கொள்வோம். 


மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..


அட்வான்ஸ் சம்பளக் கடன் vs தனிநபர் கடன் எது சிறந்தது?
அவசரச் செலவு எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் யாரும் நாம் கேட்கும்போது உடனடியாக பணத்தைத் தூக்கிக் கொடுத்துவிடுவார்களா? எனவே, தனிநபர்களிடம் வாங்கும் கடனை விட அட்வான்ஸ் சம்பளக் கடன் மிகவும் சிறந்தது.


அதேபோல, தனிநபர் கடனை வங்கிகளில் இருந்தோ அல்லது தனியாரிடம் இருந்தோ வாங்கும்போது அதற்கான வட்டி அதிகமாக இருக்கும் என்பதுடன், ஆவண சரிபார்ப்பு நடைமுறைகளால் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். 


முன்கூட்டிய சம்பளக் கடன் சிறப்பம்சங்கள்


எளிதில் கிடைக்கக்கூடியது
எளிதான தவணைகளில் சுலபமாக திருப்பிச் செலுத்தலாம்.
கடன் வரம்பு மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் இரண்டும் மிகக் குறைவு.


முன்கூட்டிய சம்பளக் கடன் பெற தேவையான தகுதிகள்
அட்வான்ஸ் சம்பளக் கடனைப் பெற ஒருவர் வேலை பார்க்கப்பவராக இருக்க வேண்டும். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வேலை செய்பவர்களுக்கு முன்கூட்டியே சம்பளக் கடன்களை வழங்குகின்றன. இதன் முக்கிய நன்மை என்னவென்றால், இந்தக் கடனைப் பெற உங்களுக்கு அதிக ஆவணங்கள் தேவையில்லை. சில நிபந்தனைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடனை எளிதாகப் பெறலாம்.


அட்வான்ஸ் சம்பளக் கடனைப் பெறுவதற்கான விதிமுறைகள்:
குறைந்தது இரண்டு வருட பணி அனுபவம் தேவை
தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு வேலை பார்த்திருக்க வேண்டும்
கடனுக்கு பிணையாக சம்பளம் கருதப்படும்
கடன் வாங்குபவரின் வயது 21 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் 


கிரெடிட் ஸ்கோர்
EMI மூலம் எளிதாகச் செலுத்தலாம் என்பது சம்பளத்தை பிணையாக வைத்து கொடுக்கப்படும் முன்கூட்டிய சம்பளக் கடன் என்று சொன்னாலும், இதற்கும் கிரெடிட் ஸ்கோர் பார்க்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | சம்பளம் வாங்காதவர்களுக்கு வீடு வாங்க கடன் கிடைக்குமா? தேவையான ஆவணங்கள் யாவை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ