புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் கூடிய விரைவில் ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளது. இது பற்றி அதிகாரப்பூர்வமாகவும் பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகையை அரசு விரைவில் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் பம்பர் நன்மைகளைப் பெறுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோடி அரசாங்கம் சமீபத்தில் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. அதன் பிறகு அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும் என்பது உறுதி. தற்போது அரசு தரப்பில் நிலுவையில் உள்ள அகவிலைப்படி அரியர் தொகையை விரைவில் அளிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது குறித்து பல ஊடக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 


இத்தனை மாதங்களின் டிஏ பாக்கி தொகை கணக்கில் வரும்


மத்திய அரசு விரைவில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் செலுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறது. ஜனவரி 2023 முதல் பிப்ரவரி வரை அதாவது இரண்டு மாதங்களுக்காக அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் சமீபத்தில் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் பிறகு டிஏ 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னர் இது 38 சதவிகிதமாக இருந்தது.


மேலும் படிக்க | ஜாக்பார்ட்! 44 சதவீதம் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்?


அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2023 முதல் பொருந்துவதாக கருதப்படும். இதன் காரணமாக ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள், அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதன்படி, அதிக அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும். முன்னதாக, ஊழியர்களுக்கு 38 சதவீத டிஏ கிடைத்து வந்தது. இது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும்


அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊழியர்களின் அமைப்புகளும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். சொல்லப்போனால் இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இது குறித்தும் அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும். 


அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.6 மடங்கில் இருந்து 3.7 மடங்காக உயர்த்தலாம் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு அடிப்படை சம்பளத்தில் கடுமையான அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்கக் கோரி வருகின்றனர். இது குறித்து, விரைவில் அரசு தரப்பில் இருந்து மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகலாம் என கருதப்படுகிறது.


மேலும் படிக்க | 8th Pay Commission வருகிறதா? 44% ஊதிய உயர்வு விரைவில்? மாஸ் அப்டேட்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ