7th Pay Commission: மீண்டும் ஒரு டிஏ ஹைக்.. மார்ச் 31 வரும் சூப்பர் செய்தி, 46% அகவிலைப்படி கிடைக்குமா?

7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தம் செய்யப்பட வேண்டும். 24 மார்ச் 2023 அன்று, ஜனவரி 2023க்கான அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2023, 03:23 PM IST
  • ஜனவரியில் இண்டக்ஸ் உயர்ந்தது
  • தற்போதைய அகவிலைப்படி விவரம் என்ன?
  • டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?
7th Pay Commission: மீண்டும் ஒரு டிஏ ஹைக்.. மார்ச் 31 வரும் சூப்பர் செய்தி, 46% அகவிலைப்படி கிடைக்குமா? title=

ஜூலை 2023-இல் அகவிலைப்படி உயர்வு: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அதிகரிப்பு ஜனவரி 1, 2023 முதல் பொருந்தும். டிஏ அதிகரிக்கப்பட்ட பின்னர் தற்போது ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்படும். இந்த அதிகரிப்பு சதவிகிதம் ஜூன் 2023 வரை அமலில் இருக்கும். எனினும், ஜூலை 1, 2023 முதல், அது மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்படும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தம் செய்யப்பட வேண்டும். 24 மார்ச் 2023 அன்று, ஜனவரி 2023க்கான அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 42% ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த ஆண்டு ஜூலை-டிசம்பர் 2022 -க்கான CPI-IW தரவை அடிப்படையாகக் கொண்டது. இப்போது புதிய அகவிலைப்படிக்கான புதிய கணக்கீடு தொடங்கியுள்ளது.

ஜனவரியில் இண்டக்ஸ் உயர்ந்தது

அகவிலைப்படியில் அடுத்து செய்யப்படும் திருத்தம் ஜூலை 1, 2023 முதல் பொருந்தும். அதாவது, ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரையிலான ஏஐசிபிஐ-ஐடபிள்யூ புள்ளிவிவரங்களில் அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைப் பொறுத்து அகவிலைப்படி அதிகரிப்பும் மாறும். இப்போது ஜனவரி CPI-IW எண் வந்துவிட்டது. மார்ச் 31, 2023 அன்று, பிப்ரவரி மாதத்தின் எண்ணிக்கையும் வரும். ஜனவரி மாதத்தில் குறியீட்டு எண் 0.5 புள்ளிகள் அதிகரித்துள்ளது. தற்போது குறியீட்டு எண் 132.8 ஆக உள்ளது. டிசம்பரில் இது 132.5 ஆக இருந்தது. 

இந்த எண்ணிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மதிப்பெண் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாத புள்ளிவிவரங்களின்படி, அகவிலைப்படி 42.37 சதவீதமாக இருந்தது. இதன் காரணமாக ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போதைய அகவிலைப்படி விவரம் என்ன? 

ஜனவரி 2023 இல் அகவிலைப்படி அதிகரித்தது. அகவிலைப்படி ஸ்கோர் 1 சதவிகிதம் உயர்ந்ததிலிருந்து இப்போது அகவிலைப்படி 43.08% ஐ எட்டியுள்ளது என்பது தெளிவாகிறது. இதில் பிப்ரவரி மாதத்தின் தரவுகளும் மார்ச் 31ஆம் தேதி சேர்க்கப்படும். இருப்பினும், அகவிலைப்படி சுமார் 44 சதவீதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்குப் பிறகு மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் CPI-IW எண்களும் வர உள்ளன. இதன் அடிப்படையில் இறுதி டிஏ / டிஆர் பற்றி முடிவு செய்யப்படும். பணவீக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக அகவிலைப்படி 4% அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | 7th Pay Commission: மகிழ்ச்சியின் உச்சியில் ஊழியர்கள்... மீண்டும் ஒரு ஊதிய உயர்வு!

டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?

7வது ஊதியக் குழுவின் படி, புதிய திருத்தம் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். அகவிலைப்படியில் 1% அதிகரிப்பு, ஜனவரி மாதத்தின் CPI-IW எண்களில் இருந்து வந்துள்ளது. ஆகையால், அகவிலைப்படி 1% அதிகரிக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், அதன் அறிவிப்புக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. மீதமுள்ள மாதங்களின் புள்ளிவிவரங்களும் வர உள்ளன. வரும் மாதங்களில் குறியீட்டு எண் மாறாமல் 132.8 ஆக இருந்தாலும், டிஏ -வில் குறைந்தது 3% அதிகரிப்பு இருக்கும். இந்தக் கணக்கீட்டில் அகவிலைப்படி உயர்வு 45% ஆக இருக்கும். ஆனால், தற்போதைய நிலைமையுடன் ஒப்பிடுகையில், வரும் மாதங்களில் குறியீட்டு எண் நிலையானதாக இருப்பது கடினம். இதில் 1% வளர்ச்சிக்கு மேலும் வாய்ப்பு உள்ளது. அதாவது அகவிலைப்படி உயர்வு 45%க்கு பதிலாக 46% ஆக இருக்கக்கூடும்.

புதிய தரவு மார்ச் 31 அன்று வரும்

ஒவ்வொரு மாதத்தின் கடைசி தேதியிலும், தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம் AICPI-IW (அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு - தொழில்துறை தொழிலாளர்கள்) இந்த எண்ணை வெளியிடுகிறது. இதில், பணியகம் பல அம்சங்களின் தரவுகளை சேகரிக்கிறது. இதன் அடிப்படையில் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, பிப்ரவரி 2023 இல் குறியீடு எப்படி இருந்தது என்பதற்கான முடிவு மார்ச் 31 அன்று எடுக்கப்படும். இந்த எண்ணின் அடிப்படையில் மேலும் கணக்கீடு செய்யப்படும். தற்போதைக்கு, புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அகவிலைப்படி 45-46 சதவீதத்தை எட்டும் என்று நம்பப்படுகின்றது. அதாவது டிஏ உயர்வு 3-4% ஆக நிர்ணயிக்கப்படலாம். 

மேலும் படிக்க | வாவ் செம்ம ஜாக்பாட், ஓய்வூதியத்தில் ரூ.15,000 உயர்வு, அரசு புதிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News