வாவ் செம்ம ஜாக்பாட், ஓய்வூதியத்தில் ரூ.15,000 உயர்வு, அரசு புதிய அறிவிப்பு

7th Pay Commission Update: மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது, அதன் படி இந்த முடிவின் எதிரொலியாக இனி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள். அதன் விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 30, 2023, 10:26 AM IST
  • மார்ச் மாதம் புதிய அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது.
  • மத்திய அரசு தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவை உயர்த்தப் போகிறது.
  • அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய பிறகு, ரூ.1262 உயர்த்தப்படும்.
வாவ் செம்ம ஜாக்பாட், ஓய்வூதியத்தில் ரூ.15,000 உயர்வு, அரசு புதிய அறிவிப்பு title=

7வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது, அதன் படி இந்த முடிவின் எதிரொலியாக இனி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள். அந்த வகையில் மோடி அரசு கடந்த ஜனவரி மாதத்தில் பெறப்படும் அகவிலைப்படியை அறிவித்து இருந்த நிலையில் தற்போது ஓய்வூதியதாரர்கள் பெறும் ஓய்வூதியத்தில் பெரிய உயர்வை ஏற்பட்டுத்தள்ளது. இத்துடன் இம்முறை ஓய்வூதியர்களின் கணக்கில் ரூ.15,144 தனித்தனியாக அனுப்படும். எனவே இந்த தொகையை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

அகவிலைப்படி 42 சதவீத விகிதத்தில் கிடைக்கும்
இந்த நிலையில் மத்திய ஊழியர்களுக்கு இனி 42 சதவீதம் அகவிலைப்படி பலன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஒருவரின் சம்பளம் 20000 ரூபாய் என்பதாக இருந்தால், 4ன் படி ஒரு மாதத்திற்கு 800 ரூபாய் சம்பளம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | UPI பரிவர்த்தனை புதிய விதிகள்: மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது..! NPCI விளக்கம்

15,144 ரூபாய் கிடைக்கும்
அதேபோல் ஒரு பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.31550 ஆக இருந்து, அவரின் அகவிலைப்படி 42 சதவீதம் ஆகிய இருந்தால், அந்த நபர் ரூ.13,251 பலன் கிடைக்கும். அதன்படி அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய பிறகு, ரூ.1262 உயர்த்தப்படும். நீங்கள் அதை ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டால், உங்கள் கணக்கில் ரூ.15,144 அனுப்படும்.

எரியர் பணமும் கிடைக்கும்
மார்ச் மாதம் புதிய அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். அதன்படி ஜனவரி 2023 மற்றும் பிப்ரவரி 2023க்கான மேம்படுத்தப்பட்ட அகவிலைப்படி செலுத்துதலும் இதில் அடங்கும். அதாவது மார்ச் மாத ஓய்வூதியத்துடன் கூடுதலாக ரூ.1262-1262 செலுத்தப்படும்.

அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்கலாம்
இதனிடையே அகவிலைப்படி உயர்வை அடுத்து மத்திய அரசு தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவையும் உயர்த்தப் போகிறதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு கூறிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்கப்படுறது.

வீட்டு வாடகை கொடுப்பனவு 3 சதவீதம் அதிகரிக்கும்
இந்த நிலையில் இம்முறை அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை 3 வீதத்தால் அதிகரிக்கவுள்ளது. தற்போது, ​​ஊழியர்களுக்கு 27 சதவீத வீட்டு வாடகை கொடுப்பனவு இருந்த நிலையில் இது 30 சதவீதமாக உயரும். ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும் போது இது 30 சதவீதமாக இருக்கும் என அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட், இனி இந்த பலன்கள் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News