7th Pay Commission: மகிழ்ச்சியின் உச்சியில் ஊழியர்கள்... மீண்டும் ஒரு ஊதிய உயர்வு!

7th Pay Commission: ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 30, 2023, 01:55 PM IST
  • மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
  • புதிய நிதியாண்டில் அதை மறுஆய்வு செய்து அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்கக்கூடும்.
  • அரசு ஊழியர்களின் தற்போதைய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காகும்.
7th Pay Commission: மகிழ்ச்சியின் உச்சியில் ஊழியர்கள்... மீண்டும் ஒரு ஊதிய உயர்வு! title=

7வது ஊதியக்கமிஷன், சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட டிஏ தொகை மார்ச் மாத சம்பளத்தில் கிடைக்கும். புதிய நிதியாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த சமயத்தில் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் திருத்தம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய நிதியாண்டு சிறப்பாக அமையப் போகிறது. வரும் ஆண்டில் ஊதியக்கமிஷனுக்கு பதிலாக புதிய பார்முலாவை அமல்படுத்தும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. 

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றப்படும் என்ற நம்பிக்கை: 

ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படலாம். மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிய நிதியாண்டில் அதை மறுஆய்வு செய்து அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் கூறுகின்றன. அரசு ஊழியர்களின் தற்போதைய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காகும். 

ஊதியத்தில் 8000 ரூபாய் மாற்றம் இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றம் தொடர்பாக இரு தரப்பு கருத்து உள்ளது. ஃபிட்மென்ட் பேக்டரை தற்போதுள்ள 2.57 மடங்கிலிருந்து 3 மடங்காக உயர்த்த வேண்டும் என்று முதல் தரப்பு கூறுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் சுமார் ரூ.3000 உயரும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு இருக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு கூறுகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் 8000 ரூபாய் மாற்றம் ஏற்படும். 

மேலும் படிக்க | வாவ் செம்ம ஜாக்பாட், ஓய்வூதியத்தில் ரூ.15,000 உயர்வு, அரசு புதிய அறிவிப்பு 

சம்பளம் எவ்வளவோ அதிகரிக்கும்?

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர்  பற்றிய முடிவு செய்த பிறகு, இது ரூ.26,000 ஆக உயரும். ஆனால், இது குறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வரவில்லை. தற்போது, ​​ஃபிட்மெண்ட் ஃபாக்டர், 2.57 மடங்கு மற்றும் அடிப்படை சம்பளம் ரூ.18000 என்ற அடிப்படையில், இதர அலவன்ஸ்கள் தவிர்த்து, ரூ.18,000 X 2.57 = ரூ.46260 கிடைக்கிறது. ஆனால் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 ஆக உயர்த்தப்பட்டால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, ஊழியர்களின் சம்பளம் 26000 X 3.68 = ரூ.95680 ஆக அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படிக்கு பிறகு அடிப்படை ஊதியத்தில் அதிகரிப்பு... விரைவில் வருகிறது மாஸ் செய்தி!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News