7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் நாட்களில் பல முக்கிய செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலை 2023 முதலான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். இதற்கான அறிவிப்பு ஆக்ஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி உயர்வு 3 சதவிகிதம் அல்லது 4 சதவிகிதம் இருக்கும் என கூறப்படுகின்றது. ஏஐசிபிஐ குறியீட்டின் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இது 3 சதவிகிதமே இருக்கும் என தெரிய வந்துள்ளது. எப்படியும் ஊழியர்களின் அகவிலைப்படி குறைந்தபட்சம் 45 சதவிகிதமாக அதிகரிப்பது உறுதி.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

50 சதவிகிதம் அகவிலைப்படி


இதற்கிடையில் 50 சதவிகித அகவிலைப்படி பற்றிய செய்தியும் பரவலாக உள்ளது. ஊழியர்களுக்கு எப்பொது 50% டிஏ கிடைக்கும்? சற்று பின்னோக்கி பார்த்தால், மார்ச் 2023 -இல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. இந்த உயர்வு ஜனவரி 2023 முதல் அமலுக்கு வந்தது. அதே போல் இந்த முறையும், அதாவது ஜூலை 2023 முதலான அகவிலைப்படி உயர்வும் 4 சதவிகிதம் இருக்கும் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். அப்படி இருந்து அடுத்த ஆண்டு, அதாவது ஜனவரி 2024 -லும் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். 


சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும்


அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டினால், அது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். ஊழியர்களுக்கான அகவிலைப்படி, வரும் காலங்களில் சம்பள உயர்வை கொண்டு வரலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.. 45% டிஏ, அறிவிப்பு எப்போது


50% அகவிலைப்படி


வரும் ஜனவரி 2024 -இல் மீண்டும் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். கடந்த சில முறைகளை போல இந்த முறையும் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.


2016 ஆம் ஆண்டின் குறிப்பாணையில், அகவிலைப்படி (DA) 50% அதாவது அடிப்படை சம்பளத்தில் 50% ஆகும்போது, அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அகவிலைப்படி பூஜ்ஜியமான பிறகு, மீண்டும் அகவிலைப்படியின் சதவிகிதம் 1, 2 என்ற முறையில் தொடங்கும். அகவிலைப்படி 50 சதவீதத்தை அடைந்தவுடன், அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். 


சம்பள உயர்வு:


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? தற்போது, ​​பே-பேண்ட் லெவல்-1 அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 18,000 ஆக உள்ளது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம். ஆனால், இதே கணக்கீட்டை 50% அகவிலைப்படியில் பார்த்தால், ஊழியர்களுக்கு 9,000 ரூபாய் கிடைக்கும். அகவிலைப்படி 50 சதவீதம் ஆனவுடன் அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதாவது ரூ.18,000 சம்பளம் ரூ.9,000 அதிகரித்து ரூ.27,000 -ஐ எட்டும். இதற்குப் பிறகு, அகவிலைப்படி ரூ.27,000 -இல் கணக்கிடப்படும். டிஏ 0 ஆன பிறகு, அது 3 சதவீதம் அதிகரித்தால், அவர்களது சம்பளத்தில் மாதம் 810 ரூபாய் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் எவ்வளவு? 3% அல்லது 4%? இதன் பின் உள்ள கணக்கீடு என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ