7th Pay Commission: டிஏ ஹைக் 3% அல்லது 4%? ஏன் இந்த குழப்பம்? எப்போது அறிவிப்பு?

7th Pay Commission: நாட்டின் சுமார் 1.25 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 7, 2023, 03:37 PM IST
  • அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும்?
  • நான்கு சதவீதம் டிஏ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?
  • ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை.
7th Pay Commission: டிஏ ஹைக் 3% அல்லது 4%? ஏன் இந்த குழப்பம்? எப்போது அறிவிப்பு? title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் நல்ல செய்தி ஒன்று உள்ளது. அவர்களது அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயரவுள்ளன. அவர்களது காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் சுமார் 1.25 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும்.

அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும்?

ஜூலை முதலான அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என நம்பப்பட்ட நிலையில், அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறிய சில விவரங்களால் அகவிலைப்படி அதிகரிப்பு 3 சதவிகிதம்தான் இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

பிடிஐயிடம் பேசிய அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, "ஜூன் 2023க்கான சிபிஐ-ஐடபிள்யூ தரவு ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால் அகவிலைப்படி உயர்வு மூன்று சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாகத்தான் கணக்கிடப்படுகிறது. தசம புள்ளிக்கு அப்பால் டிஏவை அரசாங்கம் உயர்த்துவதில்லை. இதனால் டிஏ மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக இருக்கும் என தோன்றுகிறது.” என்று கூறினார்.

நான்கு சதவீதம் டிஏ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?

ஏஐசிபிஐ குறியீட்டின் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், இம்முறையும் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாக அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெருமளவில் உயர வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த முறையும் டிஏ மற்றும் டிஆர் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாக இருக்கும்.

ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவு அகவிலைப்படியில் 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது

மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ-டிஆரை ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் அதற்கான முடிவை எடுக்கிறது. ஜூன் மாத இறுதியில் வெளிவந்த ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 46% டிஏ ஹைக்.. ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் சம்பளம்.. கணக்கீடு இதோ

ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை 

ஜனவரி - 132.8, 
பிப்ரவரி - 132.7, 
மார்ச் - 133.3, 
ஏப்ரல் - 134.2, 
மே - 134.7 
ஜூன் - 136.4 புள்ளிகள். 

மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டு எண்ணிக்கையில் 1.7 புள்ளிகள் அதிகரித்தது. இதற்குப் பிறகு, மே மாதத்தில் 45.58 ஆக இருந்த டிஏ உயர்வு மதிப்பெண் ஜூன் மாதத்தில் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில், இம்முறையும் அகவிலைப்படியில் 4 வீத அதிகரிப்பு ஏற்பட்டும் என்றும் அது 46 வீதமாக அதிகரிக்கப்படும் என்றும் பொதுவாக நம்பப்படுகின்றது. 

அமைச்சரவையின் ஒப்புதல் தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிடும்

ஆனால், இந்த முறை டிஏ மற்றும் டிஆர் எவ்வளவு உயர்த்தப்படும் என்பது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகுதான் தெரியவரும். அடுத்த சில நாட்களில் இது குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு, அகவிலைப்படி உயர்வு குறித்து நிதி அமைச்சகம் அறிவிக்கும். அதன் பிறகு, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடிப்படையில் சம்பளம் கிடைக்கும். அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதால் ஜூலை முதலான அகவிலைப்படி உயர்வின் அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். 

மத்திய ஊழியர்களின் சம்பளம் இந்த அளவுக்கு அதிகரிக்கலாம்

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களின் டிஏ மாதம் ரூ.720 ஆகவும், ஆண்டுக்கு ரூ.8,640 ஆகவும் அதிகரிக்கலாம். அதேசமயம், மாதம் 56,900 ரூபாய் அடிப்படை சம்பளமாக இருக்கும் அமைச்சரவை செயலாளர் நிலை அதிகாரிகள் மாதம் ஒன்றுக்கு 2,276 ரூபாயும், ஆண்டுக்கு 27 ஆயிரத்து 312 ரூபாயும் பலன் பெறலாம்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு: டிஏ உயர்வு

1. அடிப்படை சம்பளம் - ரூ 18,000

2. தற்போதைய டிஏ 42 சதவீதம் - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.7,560

3. புதிய டிஏ 46 சதவீதம் - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.8,280

4. டிஏ அதிகரிப்பு - ரூ 8,280- 7,560 = ரூ 720 / மாதம் 

5. ஆண்டு சம்பள உயர்வு ரூ 720 X 12= ரூ 8,640

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு: டிஏ உயர்வு

1. அடிப்படை சம்பளம் - ரூ 56,900

2. தற்போதைய டிஏ 42 சதவீதம் - மாதம் ரூ 23,898

3. புதிய டிஏ 46% - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.26,174

4. டிஏ அதிகரிப்பு - ரூ 26,174 - ரூ 23,898 = ரூ 2,276 / மாதம் 

5. டிஏவில் ஆண்டு அதிகரிப்பு - ரூ 2,276 X 12 = ரூ 27,312

மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: கிடைக்கவுள்ளதா டிஏ அரியர் தொகை? இதுதான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News