அகவிலைப்படி உயர்வு ஜூலை 2023: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அரசால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 2023 இன் அகவிலைப்படி மார்ச் மாதத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அடுத்த அகவிலைப்படி ஆறு மாதங்களுக்குப் பிறகு அறிவிக்கப்படும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில், இம்முறை அரசு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை அறிவிக்கும். இருப்பினும், ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படி செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும். ஆனால் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது 42% அகவிலைப்படி கிடைக்கிறது


7வது ஊதியக் குழுவின் படி, ஜூலை 1, 2023 முதல், அரசு ஊழியர்களுக்குப் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது கிட்டத்தட்ட மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் தெளிவு இல்லை. தற்போது அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது ஜனவரி 2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத சம்பளத்தில், உயர்த்தப்பட்ட டிஏ மற்றும் நிலுவைத் தொகை ஊழியர்களின் கணக்கில் வந்து சேரும். 7வது ஊதியக் குழுவின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை டிஏ திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... அடிப்படை சம்பளத்தில் அதிரடி ஏற்றம், ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்


மார்ச் எண்ணிக்கை ஏப்ரல் 28 மாலை வரும்


ஜூலை முதல் அதிகரித்து வரும் அகவிலைப்படியானது 2023 ஜனவரி முதல் ஜூன் வரை AICPI குறியீட்டின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வழங்கப்படும். புதிய அகவிலைப்படிக்கான ஏஐசிபிஐ  குறியீட்டின் புதிய கணக்கீடு ஏப்ரல் 28 மாலை வரும். இதிலிருந்து இம்முறை அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது தெளிவாகும். தற்போது, ​​அகவிலைப்படி குறியீட்டு அடிப்படையில் 43.79 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது பிப்ரவரி வரை 44 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது மார்ச் மாதத்தின் எண்ணிக்கை ஏப்ரல் 28 மாலை வரும். இதன் பிறகு அகவிலைப்படி அதிகரிப்பில் இன்னும் தெளிவு கிடைக்கும்.


பிப்ரவரியில் அகவிலைப்படி அதிகரிப்பு உள்ளது. ஆனால் இந்த மாதத்தில் குறியீட்டு எண்ணிக்கை 132.8ல் இருந்து 132.7 ஆக குறைந்துள்ளது. ஏப்ரல் 28 அன்று வரும் மார்ச் மாதத்திற்கான தரவுகளில் ஒரு முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஏப்ரல், மே மற்றும் ஜூன் எண்கள் இறுதி அகவிலைப்படி/அகவிலை நிவாரணத்தின் (டிஏ/டிஆர்) எண்களைத் தீர்மானிக்கும். இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி, தற்போதைய அகவிலைப்படியிலிருந்து, அதாவது, 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கலாம்.


ஃபிட்மெண்ட் ஃபேக்டரை அதிகரிக்க முடிவு


இதற்கிடையில் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மோடி அரசாங்கம்  ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றான. இத்துடன் சம்பளத்தை அதிகரிக்க புதிய ஃபார்முலாக்களையும் அரசு தயாரிக்கலாம். தற்போது, ​​பணியாளரின் அகவிலைப்படி 42 சதவீதமாகவும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 சதவீதமாகவும் உள்ளது. ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அகவிலைப்படியை உயர்த்தும் அரசு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ