7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அகவிலைப்படியை உயர்த்தும் அரசு?

7th Pay Commission: தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42% வழங்கப்பட்டு வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Apr 25, 2023, 07:07 AM IST
  • அரசாங்கம் அகவிலைப்படி விகிதத்தை தீர்மானிக்கிறது.
  • அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) இரண்டும் 4% உயர்த்தப்பட்டது.
  • அகவிலைப்படி மேலும் 45% ஆக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அகவிலைப்படியை உயர்த்தும் அரசு? title=

7th Pay Commission: சமீபத்தில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கும், அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) இரண்டும் 4% உயர்த்தப்பட்டது.  இந்த புதுப்பிக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது.  அரசு ஊழியர்கள் பலரும் 2023ம் ஆண்டு முதல் கிடைக்கும் அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி காத்துகொண்டு இருந்தனர்.  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒரு பகுதியான தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்பட்ட அகில இந்திய CPI-IW-ன் தரவுகளின்படி, அரசாங்கம் அகவிலைப்படி விகிதத்தை தீர்மானிக்கிறது.

மேலும் படிக்க | ரூ. 10 லட்சம் கட்டினால் ரூ.20 லட்சம் கிடைக்கும்... போஸ்ட் ஆபிஸின் சிறப்பு திட்டம்!

தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42% வழங்கப்பட்டு வருகிறது.  பிப்ரவரி 2023-க்கான AICPI-IW தரவுகளின்படி, அரசு மேலும் அகவிலைப்படியை திருத்தியமைக்கும் என்றும், இந்த திருத்தத்திற்கு பிறகு அகவிலைப்படி 45% ஆக அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், ஜூலை 2023-க்கு முந்தைய மாதங்களுக்கான AICPI-IW தரவு, அதாவது மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் அகவிலைப்படி/அகவிலை நிவாரணம் உயர்த்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பொதுவாக அரசு ஊழியர்கள் அவர்களின் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கூடுதலாக அகவிலைப்படியைப் பெறுகிறார்கள், இதன் சரியான அளவு 7வது ஊதியக்குழுவின் பே மேட்ரிக்ஸைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு மட்டும் இல்லாமல், மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். பயண கொடுப்பனவு (டிராவல் அலவன்ஸ்) மற்றும் நகர கொடுப்பனவும் (சிடி அலவன்ஸ்) இதில் அடங்கும். அதே நேரத்தில், அகவிலைப்படி அதிகரிப்பின் காரணமாக, அவர்களின் ஓய்வூதியப் பலன்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை போன்றவற்றில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வு இருக்கும். 

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News