தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், தனுஷ். கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என மூன்று திரையுலகிலும் நடிக்கும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது தனது 51 வது படத்தில் இவர் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா பேசியுள்ள சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனுஷ் 51:


தனுஷின் 51வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இவர், தெலுங்கில் ஹிட் அடித்த ஃபிதா, லவ் ஸ்டோரி, ஹேப்பி டேஸ் உள்ளிட்ட சில ஃபீல் குட் படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பூஜை விழா, கடந்த 18ஆம் தேதியன்று நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. 


தனுஷ் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் சுமார் 3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில், அவர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இது, தனுஷின் 50வது படமாகும். 


மேலும் படிக்க | ‘அந்த’ நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய பயந்த ரஜினி! காரணம் தெரியுமா?


தனுஷிற்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா..


தென்னிந்திய திரையுலகில் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் வந்த ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடலில் புடவையை சரிசெய்து இந்தியா முழுவதும் அறிந்த முகமாக மாறியவர் இவர். கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம், ராஷ்மிகா தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். அதன் பிறகு நடிகர் விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் ஜோடியாக நடித்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘அனிமல்’ படத்திலும் இவர்தான் கதாநாயகி. தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கும் இவர் பாலிவுட்டிலும் வளர்ந்து வரும் நாயகியாக உள்ளார். 


தனுஷின் 51வது படத்தில் ராஷ்கிமாதான் கதாநாயகி. இவர், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து ஒரு நேர்காணலில் மனம் திறந்துள்ளார். 


“இதனால்தான் படத்தில் நடிக்கிறேன்..”


ராஷ்மிகா, சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது, டி 51 படத்தின் இயக்குநர் சேகர் கமூலா அப்படத்தின் கதை குறித்து தன்னிடம் தெரிவித்த போது தனக்கு பிடித்திருந்ததாகவும் இதனால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். மேலும், இப்படத்தில் தான் நடிப்பதற்கு முக்கியமான காரணம், தனுஷ்தான் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவருடன் நடிக்க வேண்டும் என்று தனக்கு நெடு நாட்களாக ஆசை இருந்ததாகவும் அவர் மிகச்சிறந்த நடிகர் என்றும் ராஷ்மிகா தெரிவித்திருக்கிறார். 


‘இந்த’ நடிகரும் இணைகிறாரா? 


தெலுங்கு இயக்குநரான சேகர் கமூலா, தனுஷை வைத்து தான் இயக்கும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் எண்ட்ரி ஆகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாகிறது. இந்த நிலையில், தனுஷ் உடன் இன்னொரு பெரிய நடிகர் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அவர் வேறு யாருமில்லை..தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாதான். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்றளவும் வெளியாகாமல் இருக்கின்றன. 


மேலும் படிக்க | பிக்பாஸிற்கு பிறகு மீட்டிங் போட்ட Maya Squad! வைரலாகும் புகைப்படங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ