இந்த 5 விஷயங்களை பற்றி உங்கள் மனைவியிடம் ஒருபோதும் பேச கூடாது!

திருமணத்தில் சண்டைகள் வருவது சகஜம் தான் என்றாலும் நீங்களே அதனை ஏற்படுத்த கூடாது. உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாத சில விஷயங்கள் உள்ளன.

1 /6

உன்னை ஏன் திருமணம் செய்து கொண்டேன்.. உன்னால் என் வாழ்க்கை வீணாக போனது.. என்று உங்கள் மனைவியிடம் பேச உள்ளது. இது உங்கள் திருமண உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

2 /6

உன் மீது இருந்த அன்பு, காதல் சுத்தமாக போய் விட்டது என்று உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாது. இது போன்ற வார்த்தைகள் அவர்களை அதிகம் காயப்படுத்தும்.

3 /6

நான் வேறு யாரையாவது திருமணம் செய்து இருக்கலாம் என்று விளையாட்டாக கூட சொல்ல கூடாது. இது அவர்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தும். மேலும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்.

4 /6

உங்கள் மனைவியின் பெற்றோரை பற்றி குறை சொல்ல கூடாது. மேலும் அவர்களது குடும்பத்தை அடிக்கடி திட்டி பேசுவது குடும்பத்தில் மனக்கசப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

5 /6

எல்லா பிரச்சனைகளுக்கும் நீ தான் காரணம் என்று உங்கள் மனைவியை கை காட்ட கூடாது. இப்படி அடிக்கடி குறை கூறுவது உங்கள் மீது வெறுப்பை அதிகரிக்க செய்யும்.  

6 /6

நீங்கள் எதையாவது மறைக்கிறீர்கள் என்ற உணர்வை உங்கள் மனைவிக்கு ஏற்படுத்த கூடாது. திருமண உறவில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை கடைசி வரை தீர்க்க முடியாது.