வங்கிகள் பொதுவாக உங்களிடம் மறைக்கும் 5 முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா..

சில சந்தர்பங்களில் உங்கள் உதவிக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்காதது போலத் தோன்றும். உங்கள் உதவிக்கு வங்கி பொறுப்பு என்று நீங்கள் நினைத்தால் அது சரியான எண்ணம்தான். உங்களுக்கு உதவ வங்கிகள் உள்ளன.

ஆனால், அவர்கள் சில விஷயங்களை அவர்களுக்காகவும் செய்து கொள்கின்றன. சில முக்கிய தகவல்களை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து மறைக்கின்றன. அப்படிப்பட்ட தகலவ்களை இன்று நாம் இங்கு காணலாம். 

1 /5

கார்ட் திருட்டு அல்லது இழப்பு பற்றி பேசும்போது, உங்கள் டெபிட் கார்டை விட உங்கள் கிரெடிட் கார்டு மிகவும் பாதுகாப்பானது என்பதை அறிந்துகொள்ளுங்கள். இதைப் பற்றி எந்த வங்கியும் உங்களுக்குச் சொல்லாது. உங்கள் வங்கியுடன் இது குறித்து பேசவும், உங்கள் கார்ட் இழப்பு அல்லது திருட்டு ஏற்பட்டால் பாதுகாப்பு தகவல்களைப் பெறவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கிரெடிட் கார்டு பாதுகாப்பு திட்டத்தை (CPP) வழங்குகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் வங்கியிலும் இதுபோன்ற ஏதேனும் திட்டம் உள்ளதா என சரிபார்க்கவும்? இந்த வழியில் உங்கள் கார்டை மேலும் பாதுகாப்பாக வைக்கலாம்.  

2 /5

மற்ற அமைப்புகளைப் போலவே, வங்கியில் உள்ள விசுவாசிகளுக்கும் பழைய வாடிக்கையாளர்களுக்கும் அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், பெரும்பாலும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற தகவல்களை வெளியிடாது. அதைப் பற்றி நீங்களே கேட்க வேண்டும். இது பற்றி வாடிக்கையாளரே பேசினால், அப்போதுதான் வங்கிகள் தங்கள் பழைய வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் சலுகைகளை அளிக்கின்றன.

3 /5

ஏடிஎம் ஒரு தானியங்கி செயல்முறையாக இருப்பதால், ஏடிஎம் பரிவர்த்தனையின் ஒவ்வொரு ரசீதும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். இந்த செயல்முறை இயக்கப்படும் மென்பொருளிலும் சில தவறுகள் ஏற்படலாம். இதன் காரணமாக, பல பரிவர்த்தனைகள் ட்யூப்ளிகேட் ஆகின்றன. உங்களிடம் ரசீது இல்லை என்றால், பரிவர்த்தனை ஒரு நகல் என்பதை நிரூபிப்பது கடினம். அத்தகைய சூழ்நிலையில், ஏடிஎம் பரிவர்த்தனையின் ஒவ்வொரு ரசீதும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்பட்டால் ​​இந்த ரசீதுகளையும் வங்கியில் காட்டலாம்.  

4 /5

பொதுவாக வங்கிகள் பல வகையான கணக்குகளை வழங்குகின்றன. அதிக வட்டிக்கான பலனை நீங்கள் பெறும் சில கணக்குகள் உள்ளன. எந்தவொரு வங்கியும் அவற்றைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வங்கியில் எத்தனை வகையான கணக்குகள் உள்ளன, எதில் நீங்கள் அதிக நன்மை பெறுவீர்கள் என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, நீங்கள் அதிக வருமானத்தை ஈட்ட விரும்பினால், முதலில் எந்தக் கணக்கிற்கு அதிக வட்டி கிடைக்கும் என்பதைக் கண்டறிந்து பின்னர் கணக்கைத் திறக்கவும்.

5 /5

எந்த ஆவணத்திலும் கையொப்பமிடுவதற்கு முன்பு அதை சரியாகப் படிக்கவும். பொருள் கூட விளங்காத சில சொற்களை நீங்கள் அதில் காணலாம். அத்தகைய வார்த்தைகளை புறக்கணிப்பதற்கு பதிலாக, அவற்றின் பொருளைக் கேளுங்கள். ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு முன், அனைத்து சொற்களின் அர்த்தத்தையும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம்.