LIC பாலிசி lapse ஆகி விட்டதா? இந்த வழியில் 30% தள்ளுபடியுடன் அதை புதுப்பிக்கலாம்

LIC Special Offer: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC, காலம் கழிந்த, நிறுத்தப்பட்ட பாலிசிகளை மீண்டும் தொடங்குவதற்கான வசதியை அளித்துள்ளது. 

இதன் கீழ், பாலிசியை மீண்டும் தொடங்குவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதார்காக சிறப்பு மறுமலர்ச்சி பிரச்சாரத்தை (Special Revival Campaign) நிறுவனம் தொடங்கியுள்ளது.

1 /5

சிறப்பு மறுமலர்ச்சி பிரச்சாரத்தை (Special Revival Campaign) LIC தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் 2021 ஜனவரி 7 தொடங்கப்பட்டது. 2021 மார்ச் 6 வரை இது செயல்படும்.

2 /5

நிறுத்தப்பட்ட பாலிசியைத் தொடங்குவது பாலிசிதாரர்களுக்கு லாபகரமான விஷயமாக இருக்கும். ஏனெனில் காப்பீட்டுக் கொள்கையின் பிரீமியம் ஒருவரது வயதின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. நிறுத்தப்பட்ட பாலிசி மீண்டும் தொடங்கப்பட்டால், சில தாமதக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியிருக்கும். இருப்பினும், பாலிசியைத் தொடங்குவதற்கு முன், பாலிசிதாரர் COVID-19 தொடர்பான சில கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். அரசாங்கத்திடமிருந்து வந்துள்ள வழிகாட்டுதல்கள் காரணமாக இவை செய்யப்படுகின்றன.

3 /5

பாலிசியை மீண்டும் புதுப்பிப்பதில் விதிக்கப்படும் தாமதக் கட்டணத்தில் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று LIC தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஆண்டு பிரீமியம் ஒன்று முதல் மூன்று லட்சம் வரை இருந்தால், தாமதக் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்படலாம். ரூ .3,00,001 மற்றும் அதற்கு மேற்பட்ட பிரீமியத்தில் 30 சதவீதம் அல்லது 3,000 ரூபாய் வரை தள்ளுபடி இருக்கும்.

4 /5

குறிப்பிடத்தக்க வகையில், 5 ஆண்டுகளாக மூடப்பட்ட பாலிசியை மறுதொடக்கம் செய்ய பாலிசிதாரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வசதி நாடு முழுவதும் உள்ள LIC-யின் சேட்டிலைட் அலுவலகங்களிலும் கிடைக்கும். பாலிசிதாரர்கள் இதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பிரச்சாரத்தின் போது, பாலிசிதாரர்களுக்கு சில நிபந்தனைகளுடன் நிறுத்தப்பட்ட கொள்கையை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்படும். இந்த வசதியை மார்ச் 6 வரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும், ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் 9 வரை இதுபோன்ற பிரச்சாரமும் நடத்தப்பட்டது.

5 /5

இதன் மூலம், கால காப்பீடு (Term Insurance), சுகாதார காப்பீடு (Health Insurance), பல ஆபத்து பாலிசிகள் (Multiple Risk Policies) போன்ற உயர் ஆபத்து திட்டங்களில் பலன் கிடைக்காது என்று LIC தெரிவித்துள்ளது. பிரீமியம் செலுத்தும் கால அவகாசம் தீர்ந்துவிட்ட பாலிசிகளும், ரிவைவல் தேதி வரை கால அளவு பூர்த்தி அடையாத பாலிசிகளும் இந்த பிரச்சாரத்தில் புதுப்பிக்கப்படக்கூடும்.