10 ஆண்டுக்கு பிறகு உருவாகும் மிக அபூர்வமான நிகழ்வு, 4 ராசிகளுக்கு குபேர யோகம்

ஜோதிடத்தின்படி, இந்த மாதம் (பிப்ரவரி) மிகவும் மங்களகரமானதாகவும், வெற்றிகரமான மற்றும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால் தற்போது புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் சூரியன் மகர ராசியில் சேர்க்கை அடையப் போகிறது. இது 4 ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்.

மகர ராசியில் திரிகிரக யோகத்தின் பலன்: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும் காலத்திற்குப் பிறகு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களுடன் ஒரே ராசியில் சேர்க்கை அடையும், இதனால் அபூர்வ ராஜயோகம் உருவாவதுடன், இதன் மூலம் பல சுப மற்றும் அசுப பலன்களை 12 ராசிக்காரர்கள் எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் பிப்ரவரி மாதம் மகர ராசியில் கிரகளின் பெயர்ச்சி அடைய உள்ளது. இதன் காரணமாக திரிகிரக யோகம் உருவாகுகிறது. இது எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும் என்று பார்ப்போம்.

 

1 /5

மேஷம்: மகர ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கை மற்றும் திரிகிரக யோகத்தால் நீங்கள் சாதகமான் பலன்களை பெறுவீர்கள். தொழில் செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகளை தேடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவத்தை பெறுவீர்கள். 

2 /5

துலாம்: இந்த 4 கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். உத்தியோகத்தில் இருக்கும் துலாம் ராசியினர் பல முக்கிய பொறுப்புகளை பெறலாம். வண்டி வாகனம் அல்லது சொத்து போன்றவற்றை வாங்கலாம். தொழிலில் முன்னேற்றம் அடையும். ரியல் எஸ்டேட் சார்ந்த விஷயங்களில் நல்ல ஆதாயங்கள் பெற முடியும். குடும்பத்தின் தேவைக்காக அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.   

3 /5

தனுசு: சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரங்களின் சேர்க்கையால் இந்த ராசிக்கு சாதகமான பலன் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரம் செய்யும் துலாம் ராசியினருக்கு நல்ல நேரம் அமையும். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவத்தை பெறுவீர்கள்.

4 /5

மகரம்: 4 கிரகங்களின் சேர்க்கையால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். வருமானம் பெருகும், புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். நிதி நிலைமை மேம்படும். தொழிலதிபர்களுக்கு அற்புதமான நேரம். நிதி ஆதாயம் உண்டாகும். வேலைவாய்ப்பை எதிர்பார ப்ரமோஷன், சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். 

5 /5

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.