ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக அஜய் ஜடேஜா அறிவிப்பு

Ajay Jadeja ; குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக அதிகாரப்பூர்வமாக அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த அஜய் ஜடேஜா ஜாம்நகரின் அடுத்த சமஸ்தான வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

1 /7

அஜய் ஜடேஜாவை பலருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக, ஒரு வீரராக தெரியும். அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி எட்டு போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் தழுவியிருக்கிறது.  

2 /7

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக விளையாடினார். கடைசியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி போட்டியில் விளையாடினார்.

3 /7

அந்த தொடரில் ஹரியானா அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தினார். அந்த ரஞ்சி கோப்பை தொடர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கடைசி ரஞ்சி கோப்பையும் கூட.

4 /7

அதன்பிறகு, கிரிக்கெட் களத்தில் வர்ணனையாளராக செயல்படும் அஜய் ஜடேஜா, ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் செயல்பட்டு வருகிறார்.

5 /7

அவரைப் பற்றி பலரும் தெரியாத ஒரு விஷயம், அவரது குடும்பம் பாரம்பரிய மிக்க அரசு குடும்பம் ஆகும். இவரது தந்தை தவுலத்சின்ஜி ஜடேஜா குஜராத் கட்ச் பகுதியில் மூன்று முறை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

6 /7

அது மட்டும்மல்லாமல் ஜடேஜாவின் உறவினர்களான ரஞ்சிசின்ஜி மற்றும் துலீப் சின்ஜி ஆகியோர் கிரிக்கெட் பிளேயர்கள். அவர்களுடைய பெயரில் தான் இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் டிராபி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

7 /7

பேரும், புகழும் மிக்க பாரம்பரிய அரசவை குடும்பத்தின் வாரிசாக இருக்கும் ஜடேஜா இப்போதைய ஜாம்நகர் அப்போதைய நவாநகர் சமாஸ்தானத்தின் வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை இப்போதைய சமாஸ்தான அரசராக இருக்கும் மகாராஜா ஜாம்சாஹேப் தன்னுடைய அறிக்கை மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.