Astro: மற்றவர்கள் காதில் பூ சுற்றுவதில் வல்லவர்கள் ‘இந்த’ ராசிகள்!

சிலர் தான் எந்த பிரச்சனையிலும் குழப்பத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காகப் பொய்களை கூறுகின்றனர். அந்த வகையில், மற்றவரை மிக எளிதாக ஏமாற்றுவதில் வல்ல சில ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் ராசிகளின் தன்மைகள் மற்றும் குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. மொத்தம் 12 ராசிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவரின் ஆளுமை மற்றும் நடத்தை வித்தியாசமாக இருக்கும்.

1 /7

ஜோதிடத்தில், ராசிகளுக்கான குணநலன்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சில குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் பொய் சொல்வதில் நிபுணத்துவம் பெற்றவர் என கூறப்பட்டுள்ளது. மற்றவர் காதில் பூ சுற்றுவதில் வல்ல சில ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

2 /7

மிதுன ராசிக்காரர்கள் பொய்களை உண்மை போல் கூறுவதில் மிகவும் திறமையானவர்கள். யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. மிதுன ராசிக்காரர்கள் தங்களை மிகைப்படுத்தி காட்டிக் கொள்ள அடிக்கடி பொய் சொல்கிறார்கள். மிதுன ராசிக்காரர்கள் எதிரில் இருப்பவரைக் கவர பொய் சொல்ல தயங்க மாட்டார்கள்.  

3 /7

விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமானவர்கள். அவர்கள் மனதில் இருப்பதை கண்டுபிடிக்கவே முடியாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களை அல்லது தங்களுக்கு நெருக்காமான வேறு யாரையாவது பாதுகாத்துக் கொள்ள பொய்களைச் சொல்வதில் மிகவும் திறமையானவர்கள். இவர்கள் பொய்யை கண்டிபிடிப்பது கடினம்.

4 /7

துலாம் ராசிக்காரர்கள் இயல்பிலேயே உணர்ச்சிவசப்படுவார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் தயங்க மாட்டார்கள். சில சமயங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும் போது, நல்ல காரணங்களுக்காக எதிரில் இருப்பவரிடம் பொய் சொல்கிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களை புண்படுத்த மாட்டார்கள்.

5 /7

சிம்ம ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் அனைத்திலும் தங்கள் துணிச்சலை வெளிப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு எந்த கதை அல்லது விஷயத்தைச் சொன்னாலும், அதில் தனது தைரியம் துணிசலால் நடந்தது என்று அவர்கள் கூற விரும்புகிறார்கள். அவர் எப்போதும் எல்லாவற்றிலும் கவர்ச்சியின் மையமாக இருக்க விரும்புகிறார். எனவே இதற்காக சில நேரங்களில் பொய் சொல்லத் தயங்குவதில்லை.

6 /7

கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு பொய்யையும் உண்மை தானோ என்று தோன்றும் வகையில் பேசுவதில் வல்லவர்கள். இவர்கள் பெரும்பாலான இடங்களில் பொய் சொல்லவில்லை என்றாலும், அவர்கள் அவ்வாறு செய்யும்போது, ​​அதனை கண்ட் பிடிப்பது மிகவும் கடினம். 24 மணி நேரமும் அவருடன் வாழ்பவர்களால் கூட அவரது பொய்களை பிடிக்க முடியாது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.