‘தானா சேர்ந்த கூட்டம்’ விமான நிலையத்தில் மீட்டிங் போட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்!

BB 7 Contestants: பிக்பாஸ் போட்டியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் சரவண விக்ரம், ஜோவிகா விஜயகுமார் மற்றும் அக்‌ஷயா ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர்.

பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் 7 போட்டியில் பங்கேற்பாளர்களாக இருந்தவர்கள் வெளியில் மீட் செய்து போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். 

1 /7

தமிழக மக்களின் ஹாட் டாப்பிக்குகளுள் ஒன்றாக உள்ளது, பிக்பாஸ் சீசன் 7. இந்த போட்டி, கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் தற்போது வெகு சில போட்டியாளர்களே உள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆனவர்கள், வெளியில் அவ்வப்போது மீட்டிங் போட்டு வருகின்றனர். 

2 /7

துபாயில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ஆர்.ஜே.பிராவோ பிக்பாஸ் போட்டிக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார். சில வாரங்களிலேயே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், ஜோவிகா வெளியில் வந்த பிறகு அவரை சென்று சந்தித்தார். 

3 /7

அதே போல, சில நாட்களுக்கு முன்னர் போட்டியில் இருந்து வெளியேறிய சரவண விக்ரமும் ஜோவிகா மற்றும் அக்‌ஷயாவை சந்தித்துள்ளார். 

4 /7

இவர்கள் முன்று பேரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஜோவிகா, பலமான போட்டியாளராக கருதப்பட்டாலும், வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் சிலருடன் நட்பு வைத்துக்கொண்டதால் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

5 /7

அக்‌ஷயா, நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து பெரிதாக எதுவும் பேசாமல் இருந்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போது, ‘போரிங்’ போட்டியாளர் என்ற பெயருடன்தான் வெளியேறினார். 

6 /7

விக்ரம், அக்‌ஷயா மற்றும் ஜோவிகா ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள வனிதா விஜயகுமார், ‘இது தானா சேர்ந்த கூட்டம்’ என கேப்ஷன் போட்டுள்ளார். ஆனால் கமெண்ட் செக்‌ஷனில் ரசிகர்கள் அனைவரும் வனிதா உள்பட போட்டோவில் உள்ள அனைவரையும் திட்டி தீர்த்து வருகின்றனர். 

7 /7

அக்‌ஷயாவை வழியனுப்ப விக்ரமும் ஜோவிகாவும் அவருடன் விமான நிலயத்திற்கு சென்றுள்ளனர். இதை தவறாக புரிந்து கொண்ட பலர், இவர்கள் டூர் செல்வதாக நினைத்துக்கொண்டனர்.