சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே பிளேயர்...!

Moeen Ali : அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் மொயீன் அலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ளார்.

1 /9

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் மொயீன் அலி பெயர் இடம்பெறவில்லை.

2 /9

இதனைத் தொடர்ந்து அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டெய்லி மெயலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

3 /9

எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம் என மொயீன் அலி கூறினார்.

4 /9

அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து எனக்கும் விளக்கப்பட்டது. நானும் இது சரியான நேரம் என்று உணர்ந்தேன். அதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளேன் என்று மொயின் அலி அந்த பேட்டியில் கூறினார்.

5 /9

2014 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துக்காக ஒயிட்-பால் அறிமுகமான மொயீன், 10 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடினார். 

6 /9

அந்த ஆண்டிலேயே இலங்கை இங்கிலாந்துக்கு சென்றபோது, லார்ட்ஸ் மைதானத்தில் தன்னுடைய முதல் டெஸ்டிலும் அறிமுகமானார், ஒட்டுமொத்தமாக 68 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஆடியுள்ளார்.

7 /9

மொயீன் அலி 8 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் உட்பட 6678 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் மூன்று வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக 366 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

8 /9

மொயீன் அலி பேசும்போது, எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. முதலில் இங்கிலாந்துக்காக விளையாடும்போது,  எத்தனை ஆட்டங்களில் விளையாடப் போகிறேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால், கிட்டத்தட்ட 300 போட்டிகளில் விளையாடிவிட்டேன்.

9 /9

என்னால் மீண்டும் இங்கிலாந்துக்காக விளையாட முயற்சிக்க முடியும். ஆனால் நான் விளையாட மாட்டேன். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். அதனைத் தொடர்ந்து பயிற்சியாளராகவும் விருப்பம் உள்ளது என மொயீன் அலி கூறியுள்ளார்.