ஆயிரம் பூக்களே மலருங்கள்... வாழ்க்கையை சுகந்தமாக்குங்கள் in pics

மணக்கும் மலர்கள், மனம் மயக்குபவை. மலரில்லா வாழ்க்கை என்பது உப்பு சப்பில்லா வாழ்க்கையாக வெறிச்சோடிப் போய்விடும். மலர்களின் மணம் மட்டுமல்ல, குணமும், சுகந்தமும் வாழ்வை வளமாக்குகின்றன.

வித்தாய், காயாய், பூவாய் மலர்ந்து மணம் மலரும் மலர்களின் வண்ண புகைப்படத் தொகுப்பு... பூக்களின் கதம்பமல்ல, இது, வண்ண மாலை...

1 /11

ஆயிரம் மலர்கள் இருந்தாலும் அங்கு மல்லிப்பூ தனது தனித்தன்மையை நிரூபித்துவிடும்

2 /11

நீர்நிலைக்கே அழகைக் கொடுக்கும் இது தனிமையில் இருந்தாலும் பிறருக்கு நிம்மதியைத் தர முடியும் என்பதை உணர்த்தும் பூ

3 /11

ஒரு தோட்டத்தில் எத்தனை ஆயிரம் மலர்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்தவை...

4 /11

பூக்களின் அடிப்படை நிறங்களை பகுத்து கூறினாலும், ஒரு பூவுக்கும், மற்றொரு மலருக்கும் ஒரு நூலிழையாவது வண்ணத்தில் வேறுபாடு இருக்கும்.

5 /11

பெயர் தெரியுமா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டு பார்த்ததும் மனம் மயக்கும் மலர்கள்

6 /11

குளத்தில் மலர்ந்தாலும் அல்லிப்பூ, பூக்களின் அல்லி ராணி...

7 /11

மணம் இல்லா மலர்களாய் இருந்தாலும் அவற்றுக்கென ஒரு தனிச்சிறப்பு உண்டு. பார்த்தவர் கண் கவரும் மலர்களின் மனவண்ணம்...

8 /11

மலர்களின் எத்தனை விதமான வண்ணங்கள் இருந்தாலும் வெண்ணிற மலர்களுக்கு என ஒரு தனி இடம் உண்டு...

9 /11

பார்த்தாலே பசி தீரும் என்பது உணவுக்கான முதுமொழி, பார்க்காமலேயே நாசி வழியாக சென்று மனப்பசியை அடக்குபவை மலர்கள்...

10 /11

மனம் மயக்கும் மலர்கள் கண்ணையும் கவர்பவை...

11 /11

நீல மலர்கள்... இவை மனதை அமைதிப்படுத்துபவை, மனதின் ஆழம் வரை சென்று நமக்கு நிம்மதியூட்டுபவை...