“ஏவுகணை நாயகன்” டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சிந்தனைகள்...!!

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த 88-வது பிறந்தநாள் இன்று..!! அவரை வாழ்த்துவோம்...!! அவரின் சிந்தனைகளை கைக்கொள்ளுவோம்...!!

கலாம் ஐயா அவர்கள் தனது கடுமையான உழைப்பால் பல சாதனைகளை செய்ததோடு மட்டுமில்லாமல், உலக அளவில் இந்தியாவிற்கு பெருமையை சேர்த்தார். பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பெற்ற உன்னத மனிதர் தான் ஐயா அப்துல் கலாம் ஆவார். தன் வாழ்நாள் முழுவதும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாதி, மதம், இனம் என அனைத்தையும் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவர். இன்று அவருக்கு பிறந்த நாள். அவரை வாழ்த்துவோம்...!! அவரின் சிந்தனைகளை கைக்கொள்ளுவோம்...!!

1 /10

"தோல்விகளை எதிர்கொள்ள  கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை".

2 /10

"அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது".

3 /10

"நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு".

4 /10

"கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை".

5 /10

"மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது".

6 /10

"நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்".

7 /10

"கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது".

8 /10

"தோல்விகளை எதிர்கொள்ள  கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை".

9 /10

"ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர் சமமாக இருக்கும் , ஆனால் ஒரு நல்ல நண்பர் ஒரு நூலகத்துக்கு சமமாக இருக்கும்".

10 /10

"எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்".