மீண்டும் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ்?! பிரபலம் சொன்ன தகவல்..

Latest News Aishwarya Rajinikanth Actor Dhanush : ஒரு வருடத்திற்கு முன்னர் பிரிந்த ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

Latest News Aishwarya Rajinikanth Actor Dhanush :  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். இவருக்கும், இயக்குநரும்-ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவிற்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, இருவரும் பிரிய இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக பிரபலம் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். 

1 /8

தனுஷுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுடையது, காதல் திருமணம்தான். அப்போது தனுஷுக்கு 22 வயது, ஐஸ்வர்யாவிற்கு 23 வயது. 

2 /8

ஐஸ்வர்யா-தனுஷிற்கு 2 மகன்கள் இருக்கின்றனர். யாத்ரா-லிங்கா என்பது அவர்களின் பெயர். மூத்த மகன், சமீபத்தில் பள்ளி படிப்பை முடித்ததாக கூறப்படுகிறது.

3 /8

18 வருட திருமண வாழ்விற்கு பிறகு, தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிய முடிவு செய்துள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியது. 

4 /8

சமீபத்தில்தான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. தனித்தனியே பிரிந்து வாழ்ந்தாலும், இருவரும் தங்களின் குழந்தைகளை கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர். 

5 /8

தனுஷும் ஐஸ்வர்யாவும் நேரிலேயே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத இந்த சமயத்தில், இருவரும் ஒன்று சேர இருப்பதாக ஒரு பிரபலம் பேசியிருக்கிறார். 

6 /8

தமிழ் திரையுலகில், பிரபல பத்திரிக்கையாளராக விளங்குபவர் செய்யாறு பாலு. இவர்தான், தனுஷ்-ஐஸ்வர்யா இணைய இருப்பதாக பேசியிருக்கிறார். 

7 /8

ஐஸ்வர்யா சமீபத்தில் வெளியிட்டிருந்த சில பதிவுகளுக்கு, தனுஷ் லைக் போட்டிருந்தார். இது, வைரலானது. இதையடுத்து, இவர்கள் இருவரும் ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதோ, என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

8 /8

இந்த விஷயத்தால், ரஜினிகாந்தும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.