மகா சிவராத்திரி.. எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்வதால் பலன் உண்டாகும்

Mahashivratri 2024 Evening Abhishekam : இன்று மகாசிவராத்திரி தினம். இந்த தினத்தில் சனியின் அருள் பெற சிவனுக்கு எந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த அற்புத தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதேபோல் ஏழரை சனி நடக்கும் மகரம், கும்பம், மீனம், அஷ்டம சனி நடக்கும் கடகம் உள்ளிட்ட ராசிகள் இந்த சிவராத்திரியில் சிவனை வழிப்பட்டால் சனியின் நல்லருளை பெறலாம். எந்தெந்த ராசி எப்படி வழிப்பட வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். 

1 /12

மேஷ ராசியினர் சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு கரும்புச் சாறு மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்தால் சனியின் அருளைப் பெறலாம். 

2 /12

சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் வெள்ளை நிற பூக்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால், நற்பலனை பெறலாம்.

3 /12

புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசியினர் சிவராத்திரியில் சிவனுக்கு (Lord Shia) வில்வ இலையால் அபிஷேகம் செய்ய வேண்டும். 

4 /12

அஷ்டம சனியால் அவதிப்படும் கடக ராசியினர் இந்த சிவராத்திரியில் சிவனுக்கு பால் அபிஷேகம், அரளிப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

5 /12

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் வெல்லம் கலந்த பால் அபிஷேகம் செய்யவும்.

6 /12

புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசியினர் சிவலிங்கத்திற்கு ஊமத்தங்காய் பூ வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

7 /12

சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசியினர் சிவராத்திரியில் சிவலிங்கத்திற்குப் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

8 /12

விருச்சிக ராசியினர் மகா சிவராத்திரி தினத்தில் சிவனுக்கு தேன் அல்லது சர்க்கரை கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

9 /12

குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினருக்கு மகா சிவராத்திரி தினத்தில் சிவனுக்கு பால் அபிஷேகத்துடன் “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

10 /12

ஏழரை சனியால் அவதிப்படும் மகர ராசியினர் நாளை நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வதும் சனியின் தாக்கத்தை குறைக்கும்.

11 /12

ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கக்கூடிய கும்ப ராசியினர் இந்த சிவராத்திரியில், சிவனுக்கு கருப்பு எள் கொண்டு அர்ச்சனை செய்யவும். 

12 /12

மீன ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் சனியின் தோஷம் குறைய பச்சைப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.