இந்தியாவில் உள்ள புதிர்கள் நிறைந்த மர்மமான ‘சில’ இடங்கள்!

இந்தியாவில் மிகவும் புதிராகவும், மர்மங்கள் நிறைந்ததாகவும் உள்ள சில இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

1 /5

கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியில் உள்ள லாலா தொகுதியில் ஜூலை 25, 2001 அன்று சிவப்பு மழை பெய்தது. 2 மாதங்களாக சிவப்பு நிறத்தில் மழை பெய்தது. மழைநீரை சேகரித்த பிறகு, மேலே தெளிவான நீர் மிதந்தது. கீழ் மேற்பரப்பில் சிவப்பு துகள்கள் தோன்றின. இது இன்றுவரை மிகவும் புதிராகவே இருக்கிறது.

2 /5

உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் அமைந்துள்ள இமாம்பரா, இந்தியாவின் மிகவும் மர்மமான மற்றும் வரலாற்று இடங்களில் ஒன்றாகும். இங்கு நினவிவிடத்தில் 50 மீட்டர் நீளமும் 3 மாடி உயரமும் கொண்ட மண்டபம் தூண்களோ அஸ்திவாரமோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

3 /5

ஆந்திராவில் உள்ள லேபாக்ஷி சிவன் கோவில். அதன் தூண் காரணமாக, இது நிகோதா என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 70 தூண்களில் ஒரு தூண் மட்டும் அடித்தளம் இல்லாமல் காற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கோயிலின் இந்தத் தூணின் கீழ் ஆடைகளை வைப்பது வாழ்வில் செழிப்பைத் தரும் என்பது நம்பிக்கை.

4 /5

மகாராஷ்டிராவில் உள்ள சனி ஷிங்னாபூர், இங்குள்ள சனி கோவில் சில மர்மமான நிகழ்வுகளுக்கு பெயர் பெற்றது. இந்த கிராமத்தில் எங்கும் பூட்டு இல்லை. சனிதேவனின் அருளால் கிராமத்தில் குற்றங்கள் நடப்பதில்லை என உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

5 /5

அசாமின் ஜடிங்கா பள்ளத்தாக்கு பறவைகள் கூட்டமாக தற்கொலை செய்யும் இடமாகும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இங்கு பறவைகள் அதிக அளவில் இறக்கும். இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் பிசாசு மற்றும் கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருப்பதாக இங்கு வசிக்கும் பலர் கூறுகின்றனர்.