இந்த தீபாவளியில் தீரா ஒளியைப் பெறப்போகும் ராசிகளில் உங்கள் ராசியும் உள்ளதா…

தீபாவளித் திருநாள் இந்த ஆண்டு நவம்பர் 14 சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. தீபங்களின் திருவிழாவான தீபாவளி அனைவருக்கும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரும் ஒரு நாளாகும். இந்நாளில் அனைவருக்கும் மகிழ்ச்சி வீடு தேடி வரும். 

எனினும், ஜோதிடர்களின் கூற்றுப்படி, தீபாவளியின் புனித நாளன்று சில ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியில் மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் அந்த ராசிகள் எவை என்பதைப் பார்க்கலாம்.

1 /5

இந்த தீபாவளியில் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் வாடிக்கையாகப் போகின்றது. அவர்களது அனைத்து கஷ்டங்களும் தீரப்போகின்றன. தீபங்களின் இந்தத் திருநாளில் இவர்கள் மகிழ்ச்சியை பரப்பப்போகிறார்கள்.

2 /5

இந்த முறை தீபாவளி கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமான தருணங்களைக் கொண்டுவரும். அன்னை லட்சுமியின் அருள் உங்கள் மீது பரிபூரணமாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல சேர்க்கைகள் உருவாகும். தந்தை-தாய் ஆரோக்கியத்திலும் முன்னேற்றங்கள் இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமணம் கைகூடும். 

3 /5

இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் அதிர்ஷ்டத்தின் அதிபதிகள் என்று கூறப்படுகிறார்கள். ஆனால் கடந்த 6 மாதங்களாக, துலாராசிக்காரர்களை அதிர்ஷ்டம் கண்டும் காணாமலும் இருந்தது. இப்போது, தீபாவளியிலிருந்து எல்லாம் மீண்டும் மாறப்போகிறது. நிலம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வர உள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் இருக்கும். புதிய வாகனங்கள் வாங்குவது மற்றும் வெளிநாட்டு பயணங்களில் இருந்த சிக்கல் நீங்கும்.

4 /5

இந்த இராசிக்காரர்களின் நட்சத்திரங்கள் பிரகாசிக்கும். வீட்டில் குழந்தையின் சிரிப்பொலி கேட்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார பிரச்சினை நீங்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும் வீடு, மனை வாங்கும் யோகமும் கிட்டும்.

5 /5

இந்த ராசிக்காரர்களின் ஜாதகங்களின் உச்சம் தீபாவளியிலிருந்து தொடங்கும். கடந்த காலத்தில் முடங்கியிருந்த பணிகள் சூமுகமாக முடியப்போகின்றன. வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும். குழந்தைகளுடனான உறவில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.