PM Kisan Scheme: உங்க வங்கி கணக்கில் ரூ.6000 நிதி ஏற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க!

PM Kisan திட்டத்திற்கு பதிவு பண்ணீங்களா? உங்க பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று இப்படித்தான் பார்க்கணும்.. 
  • Dec 07, 2020, 14:30 PM IST

PM Kisan திட்டத்திற்கு பதிவு பண்ணீங்களா? உங்க பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று இப்படித்தான் பார்க்கணும்.. 

1 /7

PM-Kisan எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது இந்தியாவில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் மிகவும் நன்மை பயக்கும் திட்டமாகும். நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்குகிறது.

2 /7

நினைவுகூர, ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர்-கிசான் சம்மன் நிதி திட்டத்தின் ஆறாவது தவணை மையம் வழங்கியது, இப்போது ஏழாவது தவணையை விநியோகிக்க தயாராகி வருகிறது. ஆறாவது தவணை இதுவரை பெறாத விவசாயிகள் மற்றும் ஏழாவது தவணைக்காக காத்திருப்பவர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். அது எப்படினு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

3 /7

https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

4 /7

முகப்புப்பக்கத்தில் உள்ள Farmers Corner பகுதியில் உள்ள beneficiary status என்பதை கிளிக் செய்யுங்கள்.

5 /7

Beneficiary status என்பதை கிளிக் செய்த பிறகு, உங்கள் மாநிலம், மாவட்டம், வட்டம், பகுதி மற்றும் கிராமம் ஆகியவற்றை அங்குள்ள பட்டியலில் தேர்ந்தெடுங்கள்.

6 /7

பின்னர் Get Report என்பதைக் கிளிக் செய்க

7 /7

இப்போது உங்கள் கிராமத்தில் இந்த உதவி பெறும் விவசாயிகளின் பெயர்கள் திரையில் காண்பிக்கப்படும். அதில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.