Astro: அடுத்த பத்து நாட்களுக்கு ராஜ யோகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள்

Astro Predictions: ஜோதிடத்தின்படி ஏற்படும் கிரக மாற்றங்களால் அடுத்த பத்து நாட்களுக்கு இந்த மூன்று ராசியை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப்போகிறது....  

இந்த மூன்று ராசியில் ஏதாவது ஒன்று உங்களுடையதா? ஜாலியாக இருக்கலாம் ராசிக்காரர்களே!

மேலும் படிக்க | வக்ரகதியில் நகரும் புதனால் துன்பப்பட வேண்டாம்! 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

 

1 /4

3 ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 15 நாட்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரம் மற்றும் சூரியன் - சுக்கிரன் சேர்க்கை இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கிறது.

2 /4

ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் சூரியன் சுக்கிரன் சேர்க்கை நல்ல பலன்களைத் தருகிறது. அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். விலையுயர்ந்த பொருளை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வசதிகள் பெருகும். பழைய ஆசைகள் நிறைவேறும்.

3 /4

சிம்மத்தில் சூரியனும் சுக்கிரனும் இணைவது சிம்ம ராசிக்கு நல்ல பலன்களைத் தரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். இது பொருளாதார நிலையை பலப்படுத்தும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

4 /4

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். துலாம் ராசிக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மிகவும் நன்மை பயக்கும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் அமையும். புதிய வேலை வாய்ப்புடன் அதிக சம்பளமும் வரலாம். (குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. Zee Media இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை.)