திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்!

அனைவருமே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தான் விரும்புகின்றனர். ஆனால் சில தவறுகளால் பல்வேறு சண்டைகள் ஏற்பட்டு குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகிறது.

 

1 /6

திருமண வாழ்க்கையில் சண்டைகளை தவிர்க்க அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது, சிகரெட், மதுபானம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.   

2 /6

கணவன் - மனைவி இருவரும் தினசரி 30 நிமிடங்களாவது உட்கார்ந்து பேச வேண்டும். தினசரி முறையான தகவல் தொடர்பு இருந்தாலே வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.   

3 /6

திருமண உறவில் பணம் முக்கிய ஒன்றாக உள்ளது. கணவன் முறையான வருமானம் பெறவில்லை என்றால் சண்டைகள் ஆரம்பமாகும். பல்வேறு விவாகரத்துகளுக்கு முதன்மையான காரணம் பணமாக உள்ளது.   

4 /6

உங்களது குடும்பத்தினரை தவிர வெளியாட்களை வீட்டில் சேர்ப்பது குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாக காரணமாக அமையும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கு இடையில் மூன்றாவது நபர் வர அனுமதிக்க வேண்டாம்.  

5 /6

உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தவிர மற்றவர்களிடம் நெருக்கமாக பழகுவது கணவன் - மனைவி இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.  

6 /6

அவ்வப்போது வரும் சண்டைகளை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் சிறிய சண்டைகள் கூட பின்னாளில் பெரிய சண்டையாக மாறலாம்.