5 வண்ணங்களில் ஜொலிக்கும் விநோதமான ஆறு

ஐந்து வண்ணங்களில் ஓடும் தண்ணீரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. விநோதமான அந்த ஆற்றைப் பற்றி தான் நீங்கள் கேள்விப்படப்போகிறீர்கள். 

 

மலைக்காலங்க்களில் வானவியலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 7 வண்ணங்களில் இருக்கும் வானவில் சிறிது நேரம் மட்டுமே தெரியும். ஆனால், 5 வண்ணங்களில் ஓடும் ஆற்றைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இங்கே அந்த ஆற்றைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். 

 

1 /5

அந்த நதியின் பெயர் கேனோ கிறிஸ்டல்ஸ். இந்த ஆறு தென் அமெரிக்க கண்டத்தின் கொலம்பியாவில் உள்ளது. ஏதேன் தோட்டம், அதாவது கடவுள்களின் தோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 

2 /5

கானோ கிரிஸ்டல்ஸ் நதி கொலம்பியா மக்களை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆற்றில் ஐந்து வண்ணங்களில் தண்ணீர் ஓடுகிறது. மஞ்சள், பச்சை, சிவப்பு, கருப்பு மற்றும் நீல நிறங்கள் இதில் அடங்கும். ஐந்து வண்ணங்களில் தண்ணீர் இருப்பதால், இந்த நதி ஐந்து வண்ண நதி என்றும் அழைக்கப்படுகிறது. இது தவிர, இது திரவ வானவில் என்றும் அழைக்கப்படுகிறது.

3 /5

இந்த நதியைப் பார்க்கும்போது ஒரு அழகான ஓவியம் போல் தெரிகிறது. ஐந்து வண்ணங்களில் உள்ள நீரால், இந்த நதி உலகின் மிக அழகான நதியாக கருதப்படுகிறது. இந்த திரவ வானவில் நதியின் அழகு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காணப்படுகிறது. இம்மாதங்களில் இந்த ஆற்றைக் காண வெகு தொலைவில் இருந்து மக்கள் வருவார்கள்.

4 /5

இதைப் பார்க்கும்போது அதன் நீரின் நிறம் எப்படி மாறுகிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வந்துகொண்டே இருக்கும். எனவே ஆற்றின் நீர் நிறம் மாறாது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். மாறாக, ஆற்றில் இருக்கும் ஒரு சிறப்புத் தாவரமான Macarena clavigera காரணமாக இந்த ஆற்று நீரின் நிறம் மாறத் தொடங்குகிறது. இந்தச் செடியால்தான் நதி முழுவதும் இயற்கையாகவே வண்ணமயமானதாகத் தெரிகிறது.   

5 /5

இந்த செடியின் மீது சூரிய ஒளி பட்டவுடன் ஒளியின் அடிப்படையில் நிறம் மாறும். அது அப்படியே ஆற்றின் நீரில் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு நேரங்களில் தோன்றும்.