புதுடெல்லி: செல்வம் மற்றும் செழுமையின் தெய்வமான லட்சுமி தேவியின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும், செல்வம் செழித்தோங்கும். அன்னையின் அருளாசி எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகிழ்ச்சியாக இருக்க அன்னை மகாலட்சுமி தேவியின் கருணையை பெற வேண்டும். அதற்காக, பெரும்பாலான மக்கள் அன்னை லட்சுமி தேவியை பக்தி சிரத்தையுடன் வழிபடுகிறார்கள். உங்கள் வழிபாடு வெற்றியடைந்தால், தாய் லட்சுமி உங்கள் மீது மகிழ்ச்சியடைகிறார், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.


அதற்கு முன்னதாக எந்த வகையான லட்சுமி அன்னையின் படத்தை அல்லது உருவத்தை வணங்குகிறீர்கள் என்பதும் முக்கியமான ஒன்று.


பலர் லட்சுமி தேவியை வணங்குவதற்காக வீட்டிற்கு வாங்கி வரும் படங்களே அவர்களுக்கு அன்னையின் கருணையை பெற விடாமல் தடுக்கிறது. எனவே  மகாலட்சுமியின் படத்தை வீட்டிற்கு கொண்டு வரும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், இல்லையெனில் அது உங்கள் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கலாம்.


மேலும் படிக்க | குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்
 
லட்சுமி தேவியின் படத்தில் யானை இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மகாலட்சுமியின் இருபுறமும் ஓடும் நீரில் யானைகள் நின்று காசுகளைப் பொழிந்தால் அது மிகவும் நல்லது.


இதுபோன்ற படத்தை வீட்டில் வைப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பணத்துக்குப் பஞ்சம் வராது. மேலும், படத்தில் யானை தும்பிக்கையில் கலசத்துடன் நின்று கொண்டிருந்தால், அத்தகைய படமும் நல்லதாகக் கருதப்படுகிறது, அது வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறது.



மகாலக்ஷ்மி தேவியின் படத்தை வாங்கும் போது, ​​அன்னை தாமரை மலரில் அமர்ந்திருக்கும் படத்தை வாங்குவது நல்லது. அன்னையின் இந்த தோற்றம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, அத்தகைய படத்தை வணங்குவதால், வீட்டில் பணத்திற்கும் உணவுக்கும் பஞ்சம் இருக்காது.


லட்சுமியுடன் விஷ்ணுவை வழிபடுவது அவசியமானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. விஷ்ணு இல்லாமல் யாருடைய வீட்டிற்கும் மகாலட்சுமி வருவதில்லை என்பது ஐதீகம், எனவே விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் விஷ்ணுபத்தினி லட்சுமியை வீட்டிற்கு அழைக்கலாம். எனவே, லட்சுமி-நாராயணன் (லக்ஷ்மி தேவி மற்றும் விஷ்ணு இருவரும் ஒன்றாக) இருக்கும் படத்தை வீட்டில் வைக்கலாம்.
 
இரு கைகளாலும் பணத்தைப் பொழியும் லட்சுமியின் படம் செல்வத்தைப் பெற்றுக் கொடுக்கும் மங்களகரமான படம் என்று கருதப்படுகிறது. அதேபோல, படத்தில் லட்சுமி தேவி சிரித்துக் கொண்டிருந்தால், அதுவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. லட்சுமியின் படத்தில் குபேரின் படமும் இருந்தால் அது சுபிட்சத்தைக் கொடுக்கும்.


மேலும் படிக்க | போராட்ட குணம் கொண்ட வல்லவர்கள்: நண்பேண்டா என கொண்டாடும் ராசிக்காரர்கள்


தவறுதலாக கூட வீட்டில் இதுபோன்ற லட்சுமியின் படத்தை வைக்காதீர்கள்
சாஸ்திரங்களில், ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாக விவரிக்கப்பட்டுள்ளது, ஆனால் உங்கள் வீட்டில் ஆந்தையுடன் கூடிய லட்சுமி தேவியின் படத்தையோ அல்லது ஆந்தை  படத்தையோ வைக்கக்கூடாது. இல்லையெனில் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


அதுமட்டுமின்றி, அன்னை நின்றுக் கொண்டிருப்பதுபோன்ற படத்தை வீட்டில் வைக்க வேண்டாம். லட்சுமி தேவியின் உட்காரும் படமே, வீட்டில் லட்சுமி கடாட்சத்தைத் தங்க வைக்கும். லட்சுமி தேவியின் பாதம் தெரியும் படத்தை வீட்டில் வைக்க வேண்டாம். அது லட்சுமி கடாட்சத்தை வீட்டில் நீண்ட நேரம் தங்க விடுவதில்லை.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR