இலவச எல்பிஜி இணைப்பு விதியில் வரவுள்ள மிகப்பெரிய மாற்றம்

New LPG connection: உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எல்பிஜி எரிவாயு இணைப்பில் கிடைக்கும் மானியத்தில் மாற்றம் ஏற்படலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 6, 2022, 08:20 AM IST
  • எல்பிஜி இணைப்புகளில் மானியக் கட்டமைப்பு மாறுமா
  • முன்பணம் செலுத்தும் முறை மாறுமா
  • அரசாங்கம் இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குகிறது
இலவச எல்பிஜி இணைப்பு விதியில் வரவுள்ள மிகப்பெரிய மாற்றம் title=

எல்பிஜியில் மானியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எல்பிஜி எரிவாயு இணைப்புக்கு கிடைக்கும் மானியத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்களும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி இணைப்பு எடுக்க திட்டமிட்டிருந்தால், முதலில் இந்த செய்தியை கவனமாகப் படியுங்கள்.

எல்பிஜி இணைப்புகளில் மானியக் கட்டமைப்பு மாறுமா?
கொடுத்த அறிக்கையின்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிய இணைப்புகளுக்கான மானியத்தின் தற்போதைய கட்டமைப்பில் மாற்றம் இருக்கலாம். பெட்ரோலிய அமைச்சகம் இரண்டு புதிய கட்டமைப்புகளுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும் அது விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய இணைப்புகளை வழங்குவதாக அறிவித்திருந்தார், ஆனால் இப்போது ஓஎம்சிகளின் சார்பாக முன்பணம் செலுத்தும் மாதிரியை அரசாங்கம் மாற்றலாம்.

மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

முன்பணம் செலுத்தும் முறை மாறுமா?
முன்பணம் செலுத்தும் நிறுவனம் மொத்தமாக ரூ.1600 வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​ஓஎம்சிகள் முன்பணத்தை இஎம்ஐ வடிவத்தில் வசூலிக்கின்றன, அதே நேரத்தில் இந்த விஷயத்தை அறிந்த நிபுணர்களின் கூற்றுப்படி, மீதமுள்ள 1600 திட்டத்தில் அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கும். என்று கூறப்படுகிறது.

அரசாங்கம் இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குகிறது
அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது. இதன் விலை சுமார் 3200 ரூபாய் மற்றும் இதற்கு அரசாங்கத்திடம் இருந்து 1600 ரூபாய் மானியம் கிடைக்கிறது, அதே சமயம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் முன்பணமாக 1600 ரூபாய் கொடுக்கிறது. இருப்பினும், எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மானியத் தொகையை மீண்டும் நிரப்பும்போது இஎம்ஐ ஆக வசூலிக்கின்றன.

உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்வது எப்படி
* உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்வது மிகவும் எளிதானது.
* உஜ்வாலா திட்டத்தின் கீழ், பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
* pmujjwalayojana.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்தத் திட்டத்தைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறுவீர்கள்.
* பதிவு செய்ய, நீங்கள் முதலில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டும்.
* இந்த படிவத்தில், விண்ணப்பித்த பெண் தனது முழு முகவரி, ஜன்தன் வங்கி கணக்கு மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் கொடுக்க வேண்டும்.
* பின்னர், அதைச் செயலாக்கிய பிறகு, நாட்டின் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தகுதியான பயனாளிக்கு எல்பிஜி இணைப்பை வழங்குகின்றன.
* ஒரு நுகர்வோர் இஎம்ஐ ஐத் தேர்வுசெய்தால், சிலிண்டரில் பெறப்பட்ட மானியத்திற்கு எதிராக இஎம்ஐ தொகை சரிசெய்யப்படும்.

மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News