ஹைதராபாத் போதை பார்டி: சிரஞ்சிவியின் தம்பி மகள் உட்பட 144 பேர் சிக்கினர்

ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த பப் பார்டியில் போதை பொருட்களை பயன்படுத்தியதாக திரை பிரபலங்கள் உள்பட 144 பேரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2022, 12:55 PM IST
  • நடிகை நிஹாரிக்கா உட்பட 38 விஐபி பிள்ளைகள் சிக்கினர்.
ஹைதராபாத் போதை பார்டி: சிரஞ்சிவியின் தம்பி மகள் உட்பட 144 பேர் சிக்கினர் title=

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. அவற்றில் பப்கள் அதிகபடியாக நடைப்பெறும் கலாச்சாரம் பல வருடங்களாக வழக்கத்தில் உள்ளது.

ஹைதராபாத் நகரத்திலுள்ள, பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ராடிசனில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நள்ளிரவு 1 மணியைத் தாண்டி நேற்று அதிகாலை ராடிசன் ஹோட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக ஐதராபாத் போலீலாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

Raddison Hotel - Banjara Hills

அத்தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். பின்னர் அங்கு போதை பார்ட்டியில் கலந்து கொண்ட 148 பேரை கைவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஓட்டலிலிருந்து 5 பாக்கெட்டு கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. 

விசாரணையில் பார்டிக்கு வந்தவர்களுக்கு பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

மேலும் இந்த பார்ட்டியில், தெலுங்கு திரையுலக மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான நாக பாபுவின் மகளும் பிரபல நடிகையுமான நிகாரிகாவும் கலந்துகொண்டார். 

 

இவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும், தமிழில் விஜய்சேதுபதியின் "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்" என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவருடன் பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மகள், ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்து கொண்டது தெரியவந்தது.

இதுபோல் இந்த பார்ட்டியில், 38 வி.ஐ.பி.க்களின் மகள்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டுமென அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!

இது சம்பந்தமாக ராடிசன் ஹோட்டல் மேனேஜர்களான அனில்குமார் ( 35 ), அபிஷேக் (39) ஆகிய 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதன் பிறகு பஞ்சாரா ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

நடிகை நிகாரிக்கா குறித்து அவரது தந்தை நாக பாபு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் போதை பொருட்களை நிகாரிக்கா பயன்படுத்தவில்லை. பயன்படுத்திய இடத்தில் இருந்ததால் அவர் இதில் சிக்கிக்கொண்டார். மேலும் தேவையில்லாத கணிப்புகளை மேற்கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | இந்த இரண்டு ஸ்டார் ஜோடிகள் விரைவில் திருமணம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News