30 ஆண்டுக்கு பிறகு சனி ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் கோடீஸ்வர யோகம்

சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகும். நவ கிரகங்களில் சனி மெதுவாக நகரும் கிரகமாகும். அதன்படி 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் சனி எடுத்துக்கொள்ளும். திருநள்ளாறு கோவில் பஞ்சாங்கப்படி சனிபகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம்.

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். மேஷ ராசிக்காரர்கள் செய்யும் தொழிலில் லாபமும், வருமானமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கு உயரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை பெறுவீர்கள்.

2 /13

ரிஷபம்: சனி தற்போது ரிஷப ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் கிடைக்கப் போகிறது. சனி உங்களுக்கு பதவி, சொத்துக்களை வாரி வாங்குவார். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும்.

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்கிய சனி தொடங்கியுள்ளது. பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.  

4 /13

கடகம்: கடக ராசிகளுக்கு அஷ்டம சனி தொடங்கியுள்ளது. சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.  

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி ஆரம்பம். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எனவே இனி வாரும் நாட்களில் உங்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை சனி பகவான் தரப்போகிறார்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ராஜயோக சனி நடக்க ஆரம்பித்துள்ளது. சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். செல்வாக்கு அதிகரிக்கும்.

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய சனி நடக்கிறது. வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். எனவே இந்த சனி பெயர்ச்சியால் நீங்கள் பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. 

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பித்துள்ளது. இதனால் எவ்வித பாதிப்புகள் இருக்காது. ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவும் தனவரவும் அதிகரிக்கும்.

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு தற்போது சனி பெயர்ச்சியால் தைரிய சனி ஆரம்பித்துள்ளது. மேலும் தற்போது ஏழரை சனி விலகியதால் இனி நன்மைகள் மட்டுமே தேடி வரும். துன்பங்கள், துயரங்கள் நீங்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும்.

10 /13

மகரம்: கடந்த 5 ஆண்டு காலமாக ஏழரை சனியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ராசிக்காரர்களுக்கு தற்போது பாத சனி தொடங்கியுள்ளது. இதனால் கொஞ்சம் கவனம் தேவை. ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்க வேண்டும். தன வருமானமும் லாபமும் கிடைக்கும். கால்களில் அடிபடும் என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படும்.

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களு தற்போது டிசம்பர் 20 முதல் ஏழரை சனியில் தொடங்கியுள்ளது. இதனால் ஜென்ம சனி நடைபெறும். எனவே வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தரும். படிப்பினைகளால் உங்களை பக்குவப்படுத்துவார். முதியோர்களுக்கு தானம் கொடுப்பது பாதிப்பை குறைக்கும்.

12 /13

மீனம்: மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்கியுள்ளது. இதனால் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்வதன் மூலம் ஏழரை சனியின் பாதிப்பை குறைக்கலாம்.

13 /13

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.