வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஓடிச்சென்று உதவிய அரந்தாங்கி நிஷா!

சின்னத்திரை பிரபலம் அரந்தாங்கி நிஷா, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று உதவி செய்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

1 /7

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மிக்ஜாம் புயலால் பெரும் மழை பெய்தது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 

2 /7

மிக்ஜாம் புயலால் ஒரு நாள் முழுவதும் மழை பெய்தது. இதனால் வேளச்சேரி, பெரும்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் வெள்ளம் வடியாமல் இருந்தது. 

3 /7

அரந்தாங்கி நிஷா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் டெம்போவில் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 

4 /7

அரந்தாங்கி நிஷா முன்னர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தான் சென்று  கொண்டிருக்கும் பகுதி மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். 

5 /7

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சரையும் தனது போஸ்டில் டேக் செய்து மக்களுக்கு உதவி செய்யுமாறு கூறியிருந்தார். 

6 /7

அரந்தாங்கி நிஷா, தான் உதவி செய்த போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். 

7 /7

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அந்த மனசுதான் கடவுள்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.