ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி: மூழ்கிய கிராமங்களும் வெளிவந்தன

Continuing Drought In Europe: ஐரோப்பாவில் பல வாரங்களாக தொடரும் கடும் வறட்சி மக்களை வாட்டி வதைக்கிறது. வேறு வழியில்லாமல் மக்கள் தங்கள் இடங்களில் இருந்து வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் ஏரிகள் மற்றும் ஆறுகள் வறண்டு போனதால், கப்பல் போக்குவரத்தும் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் நீர் மட்டம் குறைந்து மூழ்கிய கிராமங்களும் கப்பல்களும் அரிய பொருட்களும் வெளிவந்துள்ளன.

மேலும் படிக்க |  குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்

1 /6

ரைன் நதியில் உள்ள "hunger stones" வெளியாகின. இவை, முந்தைய வறட்சியின் போது ஆற்றின் ஓரத்தில் இருந்த கற்களில் செதுக்கப்பட்டவை, இந்த கற்கள் தண்ணீருக்கு மேலே இருக்கும்போது அவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்று எதிர்கால சந்ததியினருக்கு எச்சரிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.   (Photograph:Reuters) 

2 /6

போ ஆற்றில், 1943 இல் ஜெர்மானியர்கள் பயன்படுத்திய "ஜிபெல்லோ"  படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நீர்மட்டம் சரிந்ததால், ஜிபெல்லோ படகு முதலில் உள்ளூர் மக்களுக்குத் தெரிந்தது. (Photograph:Getty)

3 /6

நாஜிக்கள் சோவியத் படைகளை விட்டு வெளியேறும் போது பல ஜெர்மன் கப்பல்கள் பிரஹோவோவில் மூழ்கடிக்கப்பட்டன. செர்பியாவின் டான்யூப் பகுதியில் நீர் மட்டம் குறைந்ததால், இரண்டாம் உலகப் போர்க் கப்பல்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன (Photograph:Reuters) 

4 /6

வெடிக்காத வெடிகுண்டு போ ஆற்றில் இருந்து இத்தாலி ராணுவத்தால் எடுக்கப்பட்டது இத்தாலியில் போ நதியில் இருந்து வெடிக்காத ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இந்த வெடிகுண்டை மீட்டெடுத்த ராணுவத்தினர், அதை பாதுகாப்பாக வெடிப்பதற்காக மாந்துவாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 3,000 பேர் வெளியேற்றப்பட்டனர். (Photograph:Reuters)   

5 /6

கி.பி 50 இல் நீரோ பேரரசரால் கட்டப்பட்ட ஒரு பழைய பாலத்தின் எச்சங்கள் ரோமில் ஆற்றின் நீர் மட்டம் குறைந்ததால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (Photograph:Getty)

6 /6

பிராங்கோ கால அதிகாரிகளால் மூழ்கடிக்கப்பட்ட "ஸ்பானிஷ் ஸ்டோன்ஹெஞ்ச்" மீண்டும் பூமிக்கு வந்துள்ளது. "ஸ்பானிஷ் ஸ்டோன்ஹெஞ்ச்" ஸ்பெயினின் காசெரெஸ் மாகாணத்தின் மத்திய வால்டேகனாஸ் நீர்த்தேக்கத்தில் தோன்றியுள்ளது. குவாடல்பெரலின் டோல்மென் என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும் கற்களின் வட்டம் கிமு 5000 இல் இருந்ததாகக் கருதப்படுகிறது. அதன்பிறகு நான்கு முறைதான் இதை பார்த்திருக்கிறார்கள். (Photograph:Getty)