நீண்ட நேரம் தூங்கினாலும் மீண்டும் தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனை இருக்கலாம்!

இரவு நன்றாக தூங்கி எழுந்தாலும் ஒரு சிலருக்கு காலையில் அதிகம் தூக்கம் வரும். இதனால் பகல் முழுக்க சோர்வாக உணர்வார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். 

 

1 /6

உடல் அதிகமாக சோர்வாக இருக்கும் போது நீண்ட நேர ஓய்வு அவசியம். இதன் மூலம் இழந்த ஆற்றலை மீண்டும் பெற முடியும். அன்றாட வேலைகளை சுலபமாக பார்க்க முடியும்.  

2 /6

இரவு சரியான தூக்கம் இல்லை என்றால் மனச்சோர்வு, பதட்டம், இதய நோய்கள் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. மேலும் பகல்நேர தூக்கத்திற்கு வழிவகுக்கும்.  

3 /6

முறையான தூக்கம் இல்லாதபோது உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஆகியவை ஏற்படும்.   

4 /6

அதிகப்படியான மன அழுத்தம் இருந்தால் இரவு சரியான தூக்கம் வராது. இதனால் நீண்ட நேரம் விழித்திருக்க நேரிடும். இது உடலுக்கு பல நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  

5 /6

சரியான உணவுகளை எடுத்து கொள்ளாதபோது தூக்கம் கெட்டுப்போகிறது. உடலுக்கு தேவையான இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது சோர்வு மற்றும் பலவீனத்தை போக்குகிறது.  

6 /6

சில நேரங்களில் உடல் தொற்றுநோயை எதிர்த்து போராடும் போது நமக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். எனவே சரியான தூக்கம் வரவில்லை என்றால் மருத்துவர்களை சந்திப்பது நல்லது.