வீட்டிற்கு வந்தவுடன் கால்களை கழுவ வேண்டுமா? ஆயுர்வேதத்தில் சொல்வது என்ன?

வீட்டிற்கு வந்தவுடன் கால்களை சுத்தம் செய்வது கால்களில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்வதோடு, கூடுதல் உடல் மற்றும் மன நல நன்மைகளையும் கொண்டுள்ளது. 

 

1 /6

நாம் வெளியில் பல இடங்களுக்கு சென்று இருப்போம், என்னதான் காலணி அணிந்து இருந்தாலும் பாதங்களில் அழுக்கு இருக்கும். எனவே வீட்டிற்கு வந்தவுடன் கழுவுவது சுத்தமாக இருக்க உதவி செய்கிறது.  

2 /6

ஆயுர்வேதத்தின் படி உங்கள் கால்களைக் கழுவிய பிறகு, அப்படியே விடாமல் முழுமையாக துடைப்பது அவசியம் என்று கூறுகிறது. மேலும் உங்களுக்கு அதிக பதற்றம் இருந்தால் கால்களை கழுவுவதன் மூலம் சரி செய்ய முடியும்.  

3 /6

உங்கள் கால்களை அடிக்கடி கழுவுவதன் மூலம் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. நமது பாதங்கள் அதிக உணர்திறன் கொண்டவை. எனவே தூங்கும் முன்பு அவற்றை சுத்தம் செய்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது.   

4 /6

உங்கள் பாதங்களில் குளிர்ந்த நீர் படும் போது, உங்களை அமைதியாக உணர செய்து, நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. மேலும் உங்கள் பாதங்களில் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.   

5 /6

வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் கால்களை கழுவுவது சுகாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் இல்லாமல், நல்ல மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.   

6 /6

உங்கள் கால்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இரவில் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். உங்கள் கால்விரல்களுக்கு இடையில் உள்ள அழுக்களை சுத்தம் செய்யவும். சிறிது நேரம் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.