Somaliland: ஒரு பாக்கெட் பிரெட் வாங்க, ஒரு மூட்டை பணம் செலுத்த வேண்டும்; காரணம் தெரியுமா..!

இந்தியாவின் பல பகுதிகளில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 க்கு அதிகரித்துள்ளது. அது சமான்ய மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. 

ஆனால்,  சோமாலிலேண்ட் என்ற நாட்டில், பிரெட் வாங்குவதற்கு கூட, ஒரு சாக்கு முழுவதும் நிரப்பிய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும்  என்பதை அறிந்தால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா..

 

1 /5

பெருமளவில் உயரும் பணவீக்கத்துடன் போராடும் இந்த நாட்டின் பெயர் சோமாலிலாந்து. இது ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. உலகின் பிற பகுதிகளும் இந்த நாட்டை அங்கீகரிக்கவில்லை, அதை சோமாலியாவின் ஒரு பகுதியாக கருதுகின்றன. இருப்பினும், இங்குள்ள மக்கள் சுயமாக அறிவிக்கப்பட்ட நாடாக ஒரு தனி நாடாக  (Somaliland) மாற்றியுள்ளனர்.

2 /5

1991 ஆம் ஆண்டில், சோமாலியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அதன் பிறகு சோமாலிலாந்து உருவானது. ஆனால் உலகளாவிய அங்கீகாரம் இல்லாததால், இந்த நாடு இன்றுவரை நிதி ரீதியாக சொந்த காலில் நிற்க முடியவில்லை. இங்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மோசமான நிலை உள்ளது. இந்த சுய-அறிவிக்கப்பட்ட நாடு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக கூறப்படுகிறது.

3 /5

இந்த நாட்டின் நாணயமான 'சோமாலி ஷில்லிங்' (Somali Shilling) நிலை மிகவும் மோசமானது. இந்த நாட்டின் நாணயத்திற்கு உலகின் பிற பகுதிகளில் மதிப்பு இல்லை. இங்கே பணவீக்க விகிதமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. ஒரு பாக்கெட் ரொட்டி வாங்க கூட, மக்கள் ஒரு சாக்கு மூட்டை நிறைய பணம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த நோட்டுகள் எண்ணுவதற்குப் பதிலாக, கடைக்காரர்கள் எடைபோட்டு கணக்கிடுகிறார்கள்.

4 /5

சோமாலிலாந்தில், மக்கள் நடைபாதையில் தங்கள் கடைகளை அமைத்துள்ளனர். அங்கு அவர்கள் டாலர்களுக்கு 'சோமாலி ஷில்லிங்' பரிமாறிக்கொள்கிறார்கள். தற்போது, ​​1 டாலரின் விலை 8500 ஷில்லிங்கில் நடக்கிறது. தற்போது, ​​சோமாலிலாந்தில் ரூ .100, 500, 1000 மற்றும் 5000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அதற்குக் கீழே உள்ள நோட்டுகள் அங்கு புழக்கத்தில் இல்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சோமாலிலாந்தில், 10 டாலருக்கு 50 கிலோ ஷில்லிங் வாங்கலாம்.

5 /5

சோமாலிலாந்து மக்கள் தங்கள் நாணயம் எந்த நேரத்திலும் செல்லாததாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். பணவீக்கத்தை சமாளிக்க, பழைய நோட்டுகளை செல்லாததாக அறிவித்து, அதன் மூலம் அரசாங்கம் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதன் காரணமாக இப்போது அவர்களிடம் உள்ள நாணயத்தை டாலர்களாக மாற்றி வருகின்றனர். ஒரு கோடி ரூபாய் அளவிற்கான நாணயத்தாள்கள் டாலர்களில் மிகக் குறைந்த தொகைக்கு பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.