MGNREGA: மன்ரேகா திட்டத்தில் கூலி திருத்தப்பட்டது! 100 நாள் வேலைக்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட் அதிர்ஷ்டம்!

MGNREGA Wages Revised : இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூலி உயர்த்தப்பட்டது சர்ச்சைகளை எழுப்பினாலும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

1 /7

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. எதிர்வரும் நிதியாண்டில் கூலி உயர்வு அமலுக்கு வரும். 

2 /7

இதில், 2024-25 நிதியாண்டுக்கு தமிழகத்தில் ஊதியம் ரூ.319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 8.5 சதவீத உயர்வு வழங்கப்பட்டதன் மூலம் இந்தத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூலி உயர்வு கிடைக்கும்  

3 /7

கூலி உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது

4 /7

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகின்றன. இந்தத் திட்டம் மூலம் நாடு முழுவதும் இருந்து 5.97 கோடி குடும்பங்கள் பயன் பெறுவது குறிப்பிடத்தக்கது

5 /7

கூலி அதிகரிப்பு என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. 3 முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 8.5% கூலி அதிகரித்து, தமிழகத்தில் ஊதியம் ரூ.319 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

6 /7

நாட்டில் தேர்தல் நடைபெறுவதையொட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது  

7 /7

திருத்தப்பட்ட ஊதிய உயர்வை அறிவிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்றுள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.