ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகத்தினால் ராஜ யோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சி ஆகின்றன அல்லது தனது நிலையை மாற்றிக் கொள்கின்றன. அனைத்து 12 ராசிகளும் கிரகத்தின் இட மாற்றத்தால் பாதிக்கப்படும். இது சிலருக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தருகிறது. 

 

1 /4

பிப்ரவரி 1-ம் தேதி குருவின் நிலை மாற்றம் காரணமாக ஹான்ஸ் பஞ்ச் ராஜ் யோகம் உருவாகும். இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்திற்கு இணையான சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /4

சிம்ம ராசிகளுக்கு மங்களகரமான பலனைத் தரும். வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் மாணக்க ரத்னம் அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

3 /4

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் ஏதேனும் ஒரு படிப்பில் சேர நினைத்தால், இந்த நேரம் சாதகமானது. நிதி நிலைமை வலுவடையும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். இந்த காலகட்டத்தில் திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைக்கும். 

4 /4

மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண பலன்கள் கிடைக்கப் போகின்றன. உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இந்தக் காலத்தில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வாகனம், சொத்து போன்றவை வாங்கும் வாய்ப்பு உண்டு. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)