முடிக்கு மருதாணி பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த விஷயங்களில் ஜாக்கிரதை!

முடிக்கு மருதாணி பயன்படுத்துவது இயற்கையான முறை என்றாலும், ரசாயணம் கலந்த மருதாணியை பயன்படுத்தினால் முடி சீக்கிரம் உதிர அதிக வாய்ப்புள்ளது.

 

1 /6

தலைமுடி வெள்ளையாக இருக்கும் பட்சத்தில் சிலர் மருதாணியை தடவும் பழக்கம் வைத்துள்ளனர். இவை முடியின் நிறத்தை மாற்றி இயற்கையான வண்ணம் கொடுக்கிறது.  

2 /6

ஆனால் தற்போது பலரும் சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த மருதாணி பவுடரை வாங்கி பயன்படுத்துகின்றனர். இவை முடிக்கு பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.   

3 /6

இந்த மருதாணியை அடிக்கடி பயன்படுத்தினால் முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றி வறட்சி மற்றும் உடையக்கூடிய தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.   

4 /6

மருதாணி முடியின் அமைப்பை மாற்றும், இதனை அடிக்கடி பயன்படுத்தினால் முடி கரடுமுரடானதாகவும், உறுத்தலாகவும் இருக்கும். மேலும் ஒருசிலருக்கு மருதாணியை முடிக்கு தடவினால் முடி ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்துடன் இருக்கும்.  

5 /6

மருதாணியை அடிக்கடி முடிக்கு பயன்படுத்தினால் முடியின் இழைகள் வலுவிழந்து எளிதில் உடையக்கூடிய மாறும். சிலருக்கு மருதாணியால் ஒவ்வாமை அல்லது உணர்திறன் ஏற்படலாம். இதன் காரணமாக தலையில் அரிப்பு அல்லது தோல் அழற்சி ஏற்படலாம்.  

6 /6

மருதாணியைப் பயன்படுத்தினால் உங்கள் கைகளும் சிவப்பாக மாறும். ஒருசிலருக்கு இவை பிடிக்காமல் போகலாம். மருதாணி சீரான தோற்றத்தை அடைவதை கடினமாக்குகிறது.