உச்சி முதல் பாதம் வரை... தினமும் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் எக்கசக்க நன்மைகள்!

இளநீர் என்பது வெயில் காலத்தில் மட்டுமல்ல எல்லா பருவ காலங்களிலும் அருந்த வேண்டியது. காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.

1 /7

இளநீர் சுவையானது என்பதுடன் கூடவே மிக மிக ஆரோக்கியமானது. வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

2 /7

உடல் பருமனால் சிரமப்பட்டு உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துங்கள். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது உடலின் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும் நார் சத்து அதிகம் கொண்டது.

3 /7

மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையிலிருந்தும் விடுபடவும், செரிமான பிரச்சனைகளை நீங்கவும் இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடையும்.

4 /7

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.  

5 /7

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் இதயப் பிரச்சனை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் பொட்டாசியத்தின் குறைப்பாடால் ஏற்படக் கூடியது. இதைத் தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது. அவர்களுக்கு இந்த இளநீர் நல்ல மருந்தாக இருக்கும்.

6 /7

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீரை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனையை தீர்க்கலாம். இதன் காரணமாக சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் சிறுநீர் பாதை வழியாக வெளியேறும்.

7 /7

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.