Apple, Google-ஐ எதிர்கொள்ள புதிய ஆயுதத்துடன் களம் இறங்குகிறது இந்திய அரசு

கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனுபவிக்கும் ஏகபோகத்தை எதிர்ப்பதற்காக, மொபைல் சேவா ஆப் ஸ்டோர் என்ற உள்நாட்டு ஆப் ஸ்டோரை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இது சுதேச ஆப் ஸ்டோருக்கு மிகவும் தேவையான ‘ஊக்கத்தை’ தரப்போகிறது என்று ஐ.டி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இது கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சார்புநிலையை மேலும் குறைக்கும், மேலும் இது இந்தியாவின் “மேக் இன் இந்தியா” முயற்சிக்கு உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 /5

மொபைல் சேவா ஸ்டோர் சமீபத்தில் தொடங்கப்பட்டது, இது இந்தியர்கள் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளது.

2 /5

கூகிள், ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, அவற்றுக்கான ஒரு மாற்றாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்று ஐடி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

3 /5

நாடு முழுவதும் உள்ள டெவலப்பர்களுக்கு ஒரு மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மற்றும் மொபைல் சேவா ஆப்ஸ்டோரில் 965 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

4 /5

இந்த செயலிகளை மாநில மற்றும் மத்திய அரசு வலைத்தளத்திலிருந்து மற்றும் மொபைல் சேவா ஆப்ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

5 /5

மொபைல் சேவா ஆப்ஸ்டோரில் பல செயலிகள் உள்ளன. அவை மாநிலங்கள் மற்றும் வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப கிடைக்கின்றன. மேலும் இந்த செயலிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.