ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் உங்கள் கையில் ரூ.5000 இருக்கும்! எப்படி தெரியுமா?

1 வருடம் முடிந்ததும் உங்களுக்கு அந்த வசதி கிடைக்கும். தற்போது, இந்தத் திட்டத்தில் 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

  • Feb 14, 2021, 10:27 AM IST

ஒவ்வொரு மாதமும் 5,100 வரையில் சம்பாதிக்கும் வகையில் சிறப்பு சேமிப்புத் திட்டம் தபால் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 /5

தபால் நிலயத்தால் செயல்படுத்தப்படும் மிகச் சிறந்த திட்டங்களில் இந்த மாத வருமானத் திட்டமும் ஒன்றாகும். இதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை ஈட்ட முடியும். இது உத்தரவாதமான லாபம் தரும் திட்டமாகும். 

2 /5

நீங்கள் குறைந்த ரிஸ்க்குடன் முதலீடு செய்ய விரும்பினால், இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் குறைந்தது 1,500 ரூபாயை டெபாசிட் செய்யலாம்.

3 /5

மாத வருமான திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் தபால் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று ஒரு கணக்கைத் திறக்க முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. 

4 /5

நீங்கள் முதிர்வு காலத்துக்கு முன்னரே பணத்தை எடுக்க விரும்பினால் கணக்கின் 1 வருடம் முடிந்ததும் உங்களுக்கு அந்த வசதி கிடைக்கும். தற்போது, இந்தத் திட்டத்தில் 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தனியாகவோ அல்லது கூட்டுக் கணக்கைத் திறப்பதன் மூலம் நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்.

5 /5

வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு ரூ.4.5 லட்சம் ஆகும். ஆனால் கணவன்-மனைவி இருவரும் கூட்டுக் கணக்கின் கீழ் இந்தத் திட்டத்தில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், அவர்கள் ஆண்டுக்கு 6.6 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.61,200 சம்பாதிப்பார்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளருக்கு ரூ.5,100 வட்டி வருமானம் கிடைக்கும்.