என்னதான் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் எடுபடாது -ஜெயக்குமார்!

காவிரி விவகாரத்தில் குமாரசாமி என்னதான் அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்!

Last Updated : Jun 24, 2018, 05:54 PM IST
என்னதான் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் எடுபடாது -ஜெயக்குமார்! title=

காவிரி விவகாரத்தில் குமாரசாமி என்னதான் அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்!

தற்போது, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முகாமிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், நாமக்கல் பொதுகூட்டத்திற்கு செல்லும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் கூறியதாவது.....! 

காவிரி விவகாரத்தில் குமாரசாமி என்ன தான் அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது.சட்டரீதியாக எதுவும் செய்ய முடியாமல் அரசியல் ரீதியாக குமாரசாமி பேசி வருகிறார் என தெரிவித்தார். 

மேலும், சேலம்-சென்னை வரையிலான பசுமைவழி விவகாரத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு இல்லாமல் கருத்து கேட்டபிறகே திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதை தொடர்ந்து ஆளுநர் ஆய்வை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, செய்தியாளர்கள் எவ்வாறு செய்தி சேகரிக்க செல்கிறார்களோ? அது போன்று தான் தூய்மை பணிக்கான ஆய்வை ஆளுநர் மேற்கொள்கிறார் என்று தெரிவித்தார். ஸ்டாலின் போன்ற மற்ற அமைப்பினர் பொதுமக்களின் கவன்ததி ஈர்க்க இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். 

 

Trending News